ETV Bharat / bharat

Namma Metro Case: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

author img

By

Published : Jan 10, 2023, 10:55 PM IST

கட்டுமானப்பணியின் போது மெட்ரோ ரயில் தூண் சரிந்து விழுந்து தாய், குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் மாநில அரசு தலா ரூ.20 லட்ச ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளன.

Namma Metro
Namma Metro

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து ஹெச்.ஆர்.பி.ஆர் லேஅவுட் வரை தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கல்யாண் நகரில் இருந்து ஹெச்.ஆர்.பி.ஆர் லேஅவுட் செல்லும் சாலையில் உள்ள நகவாரா என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தூண் இன்று (ஜன.10) காலை திடீரென சரிந்து பிரதான சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது அந்தவழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது தூண் விழுந்த நிலையில், வாகனத்தில் தேஜஸ்வி மற்றும் அவரது இரண்டரை வயது மகன் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தேஜஸ்வி மற்றும் அவரது இரண்டரை வயது மகன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தேஜஸ்வியின் கணவர் லோகித் தொடர் சிகிச்சையில் உள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார் தாய் மற்றும் மகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை அனுப்பினர்.

இந்நிலையில், மெட்ரோ தூண் சரிந்து விழுந்த குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிவாரணமாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ’கட்டுமானப் பணிகளின் போது மெட்ரோ ரயிலுக்காக போடப்பட்ட தூண் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து கேள்விப்பட்டேன். தூண் விழுந்ததில் தாய் மற்றும் மகன் உயிரிழந்தது மீளாத துயரத்திற்குள்ளாக்கியது.

சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ எனக் கூறினார். மேலும் விபத்துக்கான காரணம் மற்றும் ஒப்பந்ததாரர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் இழப்பை ஈடுகட்ட 20 லட்ச ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், உயிரிழந்த தேஜஸ்வி மற்றும் இரண்டரை வயது குழந்தையின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவையின் மரபை மீறியவர் ஆளுநர் ஆர்.என்.ரவி - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கண்டனம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து ஹெச்.ஆர்.பி.ஆர் லேஅவுட் வரை தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கல்யாண் நகரில் இருந்து ஹெச்.ஆர்.பி.ஆர் லேஅவுட் செல்லும் சாலையில் உள்ள நகவாரா என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தூண் இன்று (ஜன.10) காலை திடீரென சரிந்து பிரதான சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது அந்தவழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது தூண் விழுந்த நிலையில், வாகனத்தில் தேஜஸ்வி மற்றும் அவரது இரண்டரை வயது மகன் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தேஜஸ்வி மற்றும் அவரது இரண்டரை வயது மகன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தேஜஸ்வியின் கணவர் லோகித் தொடர் சிகிச்சையில் உள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார் தாய் மற்றும் மகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை அனுப்பினர்.

இந்நிலையில், மெட்ரோ தூண் சரிந்து விழுந்த குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிவாரணமாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ’கட்டுமானப் பணிகளின் போது மெட்ரோ ரயிலுக்காக போடப்பட்ட தூண் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து கேள்விப்பட்டேன். தூண் விழுந்ததில் தாய் மற்றும் மகன் உயிரிழந்தது மீளாத துயரத்திற்குள்ளாக்கியது.

சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ எனக் கூறினார். மேலும் விபத்துக்கான காரணம் மற்றும் ஒப்பந்ததாரர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் இழப்பை ஈடுகட்ட 20 லட்ச ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், உயிரிழந்த தேஜஸ்வி மற்றும் இரண்டரை வயது குழந்தையின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவையின் மரபை மீறியவர் ஆளுநர் ஆர்.என்.ரவி - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.