ETV Bharat / bharat

'ஆசை மனைவி'க்காக மகளை தாக்கிய தந்தை!

author img

By

Published : Dec 1, 2020, 6:37 PM IST

முதல் மனைவி விவாகரத்து தர மறுத்ததால்,பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மகளை அடியாள் வைத்து தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆசை மனைவிக்காக மகளை தாக்கிய தந்தை
ஆசை மனைவிக்காக மகளை தாக்கிய தந்தை

கர்நாடகா மாநிலம் உடுப்பி நகரம் அருகே உள்ள சங்கர்பூரா பகுதியைச் சேர்ந்தவர் ரவி சஞ்சேட்டி.

இவருக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு ஆஷா என்பவருடன் திருமணம் நடந்தது. இவருக்கு ரியா எனும் மகள் ஒருவர் உள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ரவி மற்றொரு பெண்ணை சட்டவிரோதமாக திருமணம் செய்து, முதல் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆஷா, வெறொரு பெண்ணை மணந்த காரணத்தினாலேயே தனது கணவர் விவாகரத்துக்கோருவதாக, நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தார். இதற்கு அவரது மகள் உதவினார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் ரவியின் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அடியாளைக் கொண்டு தனது மகள் ரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

ரியா சென்ற காரினை வழிமறித்த நபர் ஒருவர், ரியாவின் தலைமுடியினை இழுத்தும், காரின் கண்ணாடியை உடைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியினர் அந்நபரைப் பிடித்து புலிகேசிக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ரியாவின் தந்தை இந்தத் தாக்குதலை நடத்தியது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்நபர் மீதும், ரவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 8 குழந்தைகள் உயிரிழப்பு!

கர்நாடகா மாநிலம் உடுப்பி நகரம் அருகே உள்ள சங்கர்பூரா பகுதியைச் சேர்ந்தவர் ரவி சஞ்சேட்டி.

இவருக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு ஆஷா என்பவருடன் திருமணம் நடந்தது. இவருக்கு ரியா எனும் மகள் ஒருவர் உள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ரவி மற்றொரு பெண்ணை சட்டவிரோதமாக திருமணம் செய்து, முதல் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆஷா, வெறொரு பெண்ணை மணந்த காரணத்தினாலேயே தனது கணவர் விவாகரத்துக்கோருவதாக, நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தார். இதற்கு அவரது மகள் உதவினார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் ரவியின் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அடியாளைக் கொண்டு தனது மகள் ரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

ரியா சென்ற காரினை வழிமறித்த நபர் ஒருவர், ரியாவின் தலைமுடியினை இழுத்தும், காரின் கண்ணாடியை உடைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியினர் அந்நபரைப் பிடித்து புலிகேசிக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ரியாவின் தந்தை இந்தத் தாக்குதலை நடத்தியது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்நபர் மீதும், ரவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 8 குழந்தைகள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.