ETV Bharat / state

பாசத்திற்கு கட்டுப்படும் தமிழக கும்கி யானைகள்.. சீக்ரெட் உடைத்த பாகன்கள்! - Kumki Elephants

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

பாசத்தால் வளர்க்கப்படும் தமிழக கும்கி யானைகள், இந்தியா முழுவதும் வலம் வரும் அளவிற்கு வழங்கப்படும் பயிற்சி முறைகள் என்ன என்பது குறித்த தகவல்களை இந்தச் செய்தி தொகுப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

கும்கி யானைகள் மற்றும் பாகன்கள்
கும்கி யானைகள் மற்றும் பாகன்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகள் வராமல் இருக்க, வனப்பகுதியை ஒட்டி அகழி எடுத்தல், சோலார் மின் வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது. எனினும், இதனையும் மீறி ஊருக்குள் வந்து பயிர் சேதம் செய்வது, பொதுமக்களை தாக்குவதுமாக உள்ள யானைகளை பிடிப்பதற்கும், அதனை இட மாற்றம் செய்வதற்காகவும் பிரத்யேகமாக பழக்கப்பட்ட கும்கி யானைகள் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவிலேயே சிறந்த கும்கிகள் தமிழகத்தில் தான் உள்ளது என வனத்துறையினர் கூறுகின்றனர்.

அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் முதுமலை யானைகள் காப்பகத்தில் உள்ள 29 கும்கி யானைகள், டாப்சிலிப்பில் உள்ள 26 கும்கி யானைகள் என மொத்தம் உள்ள 55 கும்கி யானைகளில் கலீம், வில்சன், சின்னதம்பி யானைகள் மிகவும் பிரபலமானதாக உள்ளது என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பயிற்சியில் உள்ள கும்கி யானைகள்
பயிற்சியில் உள்ள கும்கி யானைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

குணங்களை கட்டிப்போட முடியாது: இத்தகைய கும்கி யானைகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது குறித்து யானை பாகன்கள் கூறுகையில், “அதிகம் பிரச்னைக்குரிய காட்டு யானையைப் பிடித்து வந்து முதலில் மரக்கூண்டில் அடைப்போம். முதல் ஒரு வாரத்துக்கு கூண்டை உடைத்து, எப்படியாது தப்பிச்சு போகணும்னு ஆக்ரோஷமாவே இருக்கும். நம்ம மேல இருக்குற கோபம் எல்லாம், கூண்டுல முட்டி வெளிப்படுத்தும்.

நாங்க சொல்ற கட்டளைகளை செஞ்சா தான் உணவு தருவோம். சில நேரம் யானை நம்மள துரத்தும், அதுபோன்ற நேரத்தில் பல பேர் அடி வாங்கி உள்ளனர். நம்ம என்னதான் பழகினாலும், அது காட்டு யானை தான். அதோட கால்கள வேண்டுமானால் சங்கிலியால் கட்டலாம். ஆனா, அதோட குணங்களைக் கட்டிப்போட முடியாது. ஏதாவது ஒரு நேரத்துல அந்த கோபம் வந்துட்டேதான் இருக்கும்.

ஒரு துண்டு கரும்பு: ஒவ்வொரு முறை நம்ம சொல்றதை கேக்கறப்ப, யானைக்கு ஒரு துண்டு கரும்பு தருவோம். படிப்படியா அந்த ஆக்ரோஷம் குறைஞ்சு சாதுவா மாறி, நம்ம சொல்றதை கேக்க ஆரம்பிச்சுடும். அந்த ஒரு துண்டு கரும்புலதான் எல்லாமே இருக்கு.

பாகனிடம் அன்பைப் பொளியும் கும்கி
பாகனிடம் அன்பைப் பொளியும் கும்கி (Credits - ETV Bharat Tamil Nadu)

மத்த இடத்துல எல்லாம் அங்குசம் வெச்சு தான் யானைக்கு பயிற்சி குடுப்பாங்க. நாங்க அங்குசத்தை எல்லாம் தொடவே மாட்டோம். கருந்துவரை குச்சிதான் பயன்படுத்துவோம். இது பெருசா வலிக்காது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அங்குசுத்தை வெச்சு யானைகள குத்துவாங்க. அதனால்தான் யானைகள் கோபப்பட்டு பாகன்களை தாக்குகிறது.

ஆனால், தமிழகத்தில் பாகன்கள் நெருங்கி பழகி, அன்பா, பாசமா, அனுசரணையா பேசுவது தான் எங்க பழக்கம். அப்படி பழகினாலே அது நல்லா புரிஞ்சுக்கும். நம்ம குழந்தைங்களை கொஞ்சுவது போல் தான். நாங்கள் சாப்பிடும் போது கூட யானைக்கு கொடுத்து விட்டுதான் சாப்பிடுவோம்.

குறும்புக்கார யானைகள்: கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பல ஆபரேஷனில் வெற்றிகரமா முடிச்சுருக்கோம். இப்பவும் கேரளா முத்தங்கி யானை முகாம்ல டாப்ஸ்லிப்பைச் சேர்ந்த பாகன்கள் தான் வேலை பார்க்குறாங்க. யானைக்கு பயிற்சி குடுக்கறது ஒரு மாதிரியான சவால்கள் இருக்கும். அதுவே ஏற்கனவே பயிற்சி பெற்ற யானைகளுக்கு சில நேரங்களில் பாகன்கள் மாற வேண்டிய சூழல் வரும். அதில் சவால் இன்னும் அதிகம்.

கொஞ்ச நாளுக்கு அந்த யானைக்கு பழக்கமானவங்க கூடயேபோய் பழகுவோம். குறும்பான யானையா இருந்தா அதிக நாட்கள் எடுக்கும். எங்க வாசனைய அதுக்கு நல்லா பழக்கணும். அந்த பாகன் வரதுக்கு முன்னாடி, அதை நல்லா மேய்ச்சலுக்கு கூப்பிட்டு போய் பேச்சு குடுத்துட்டே நம்பிக்கை வர வைக்கணும். அப்பவும் வாய்ப்பு கெடக்கறப்ப நம்மள அடிக்க வரும். சாப்பாடு குடுத்துகிட்டே இருந்து நல்லா கவனிக்கனும். அப்பதான் யானை நம்ம கூட பழகும். அதுவரை நெருங்கவே முடியாது.

இதையும் படிங்க: '40 ஆண்டு கால யானை தந்தம்'.. வறுமைக்காக விற்க முயற்சி.. கோவையில் 5 பேர் கைது!

யானை மொழி: யானை பயிற்சிக்கு தனி பாசை இருக்கு. 'வர்தா' (அருகில் வருவது), 'வரியே' (முன்நோக்கி செல்வது), 'மண்டிசூட்' (இரண்டு கால்களை மடிப்பது), 'பைட்' (படுப்பது), 'ஜமாட்' (காட்டு யானைகள் கயிறுல கட்டிருக்கும்போது, அது ஓடாம இருக்க கும்கிய கயிற மிதிக்க சொல்வது), 'அதி' (கால்களை தூக்குவது), 'திரிகூட் டிரை' (கயிறை தந்தத்தில் சுற்றி வாயில் கடிப்பது).

பாகனிடம் கொஞ்சி விளையாடும் கும்கி யானை
பாகனிடம் கொஞ்சி விளையாடும் கும்கி யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த மொழிய அதுக்கு புரிய வைக்கறதுதான் பயிற்சியோட அடிப்படை. 20 வயசுக்கு மேல் உள்ள யானைகளா இருந்தா மூணு மாசத்துலயும், சின்ன வயசா இருந்தா ஒரு மாசத்துலயும் பயிற்சி குடுத்துருவோம். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 47 மொழிகள் கலந்துருக்கும்.

இதுதவிர யானைங்கள் கிட்ட எங்களோட மலசர், குறும்பர் பழங்குடி பாசையும் பேசுவோம். இதை தமிழ்லயே சொல்லி பழக்கலாம். ஆனா, அப்படி பழக்கினா யார் கூப்பிட்டாலும் போயிடும். அதனாலதான் இந்த மொழிய பயன்படுத்தறோம்.

குழந்தையாக மாறும் யானை: நம்ம யானைகள் மேல எவ்ளோ அன்பா இருக்கமோ, அதே மாதிரி யானைகளும் நம்ம மேல அன்பா இருக்கும். காட்டுக்குள் உணவு எடுக்க செல்லும்போது மற்ற விலங்குகளால் ஏற்படும் ஆபத்தான நேரத்துல யானைகள் நம்மள காப்பாத்தும். நாங்க எங்கயாச்சு வெளியே போயிட்டு வரும்போது வீட்ல குழந்தைகளுக்க தின்பண்டம் வாங்கற மாதிரி, யானைக்கு வாழை, தர்பூசணி வாங்கிவிட்டு வந்து குடுப்போம்.

பயிற்சிபெறும் கும்கியிடம் அன்பு செலுத்தும் பாகன்
பயிற்சிபெறும் கும்கியிடம் அன்பு செலுத்தும் பாகன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சமீபத்துல தாய்லாந்துக்கு போனோம். அவங்க யானைகளுக்கு பயிற்சி குடுக்க அங்குசம், ஈட்டி, கத்தி எல்லாம் வெச்சருக்காங்க. அது ரொம்ப ஆபத்து. கடைசி வரைக்கும் யானைக்கு நம்ம மேல நம்பிக்கையே வராது. இங்க ஒரு குச்சி தான் வெச்சுருப்போம். நம்மளோட ஒவ்வொரு அசைவும் யானைங்களுக்கு தெரியும். அதனால அன்பை பகிரும்போதுதான் நம்பிக்கை வரும். யானைகள் நம்மளை விட அறிவாளி. நம்பிக்கை மட்டும் வர வெச்சுட்டா, அந்த யானை நம்ம சொன்னா எதையும் கேட்கும்" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

கோயம்புத்தூர்: வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகள் வராமல் இருக்க, வனப்பகுதியை ஒட்டி அகழி எடுத்தல், சோலார் மின் வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது. எனினும், இதனையும் மீறி ஊருக்குள் வந்து பயிர் சேதம் செய்வது, பொதுமக்களை தாக்குவதுமாக உள்ள யானைகளை பிடிப்பதற்கும், அதனை இட மாற்றம் செய்வதற்காகவும் பிரத்யேகமாக பழக்கப்பட்ட கும்கி யானைகள் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவிலேயே சிறந்த கும்கிகள் தமிழகத்தில் தான் உள்ளது என வனத்துறையினர் கூறுகின்றனர்.

அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் முதுமலை யானைகள் காப்பகத்தில் உள்ள 29 கும்கி யானைகள், டாப்சிலிப்பில் உள்ள 26 கும்கி யானைகள் என மொத்தம் உள்ள 55 கும்கி யானைகளில் கலீம், வில்சன், சின்னதம்பி யானைகள் மிகவும் பிரபலமானதாக உள்ளது என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பயிற்சியில் உள்ள கும்கி யானைகள்
பயிற்சியில் உள்ள கும்கி யானைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

குணங்களை கட்டிப்போட முடியாது: இத்தகைய கும்கி யானைகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது குறித்து யானை பாகன்கள் கூறுகையில், “அதிகம் பிரச்னைக்குரிய காட்டு யானையைப் பிடித்து வந்து முதலில் மரக்கூண்டில் அடைப்போம். முதல் ஒரு வாரத்துக்கு கூண்டை உடைத்து, எப்படியாது தப்பிச்சு போகணும்னு ஆக்ரோஷமாவே இருக்கும். நம்ம மேல இருக்குற கோபம் எல்லாம், கூண்டுல முட்டி வெளிப்படுத்தும்.

நாங்க சொல்ற கட்டளைகளை செஞ்சா தான் உணவு தருவோம். சில நேரம் யானை நம்மள துரத்தும், அதுபோன்ற நேரத்தில் பல பேர் அடி வாங்கி உள்ளனர். நம்ம என்னதான் பழகினாலும், அது காட்டு யானை தான். அதோட கால்கள வேண்டுமானால் சங்கிலியால் கட்டலாம். ஆனா, அதோட குணங்களைக் கட்டிப்போட முடியாது. ஏதாவது ஒரு நேரத்துல அந்த கோபம் வந்துட்டேதான் இருக்கும்.

ஒரு துண்டு கரும்பு: ஒவ்வொரு முறை நம்ம சொல்றதை கேக்கறப்ப, யானைக்கு ஒரு துண்டு கரும்பு தருவோம். படிப்படியா அந்த ஆக்ரோஷம் குறைஞ்சு சாதுவா மாறி, நம்ம சொல்றதை கேக்க ஆரம்பிச்சுடும். அந்த ஒரு துண்டு கரும்புலதான் எல்லாமே இருக்கு.

பாகனிடம் அன்பைப் பொளியும் கும்கி
பாகனிடம் அன்பைப் பொளியும் கும்கி (Credits - ETV Bharat Tamil Nadu)

மத்த இடத்துல எல்லாம் அங்குசம் வெச்சு தான் யானைக்கு பயிற்சி குடுப்பாங்க. நாங்க அங்குசத்தை எல்லாம் தொடவே மாட்டோம். கருந்துவரை குச்சிதான் பயன்படுத்துவோம். இது பெருசா வலிக்காது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அங்குசுத்தை வெச்சு யானைகள குத்துவாங்க. அதனால்தான் யானைகள் கோபப்பட்டு பாகன்களை தாக்குகிறது.

ஆனால், தமிழகத்தில் பாகன்கள் நெருங்கி பழகி, அன்பா, பாசமா, அனுசரணையா பேசுவது தான் எங்க பழக்கம். அப்படி பழகினாலே அது நல்லா புரிஞ்சுக்கும். நம்ம குழந்தைங்களை கொஞ்சுவது போல் தான். நாங்கள் சாப்பிடும் போது கூட யானைக்கு கொடுத்து விட்டுதான் சாப்பிடுவோம்.

குறும்புக்கார யானைகள்: கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பல ஆபரேஷனில் வெற்றிகரமா முடிச்சுருக்கோம். இப்பவும் கேரளா முத்தங்கி யானை முகாம்ல டாப்ஸ்லிப்பைச் சேர்ந்த பாகன்கள் தான் வேலை பார்க்குறாங்க. யானைக்கு பயிற்சி குடுக்கறது ஒரு மாதிரியான சவால்கள் இருக்கும். அதுவே ஏற்கனவே பயிற்சி பெற்ற யானைகளுக்கு சில நேரங்களில் பாகன்கள் மாற வேண்டிய சூழல் வரும். அதில் சவால் இன்னும் அதிகம்.

கொஞ்ச நாளுக்கு அந்த யானைக்கு பழக்கமானவங்க கூடயேபோய் பழகுவோம். குறும்பான யானையா இருந்தா அதிக நாட்கள் எடுக்கும். எங்க வாசனைய அதுக்கு நல்லா பழக்கணும். அந்த பாகன் வரதுக்கு முன்னாடி, அதை நல்லா மேய்ச்சலுக்கு கூப்பிட்டு போய் பேச்சு குடுத்துட்டே நம்பிக்கை வர வைக்கணும். அப்பவும் வாய்ப்பு கெடக்கறப்ப நம்மள அடிக்க வரும். சாப்பாடு குடுத்துகிட்டே இருந்து நல்லா கவனிக்கனும். அப்பதான் யானை நம்ம கூட பழகும். அதுவரை நெருங்கவே முடியாது.

இதையும் படிங்க: '40 ஆண்டு கால யானை தந்தம்'.. வறுமைக்காக விற்க முயற்சி.. கோவையில் 5 பேர் கைது!

யானை மொழி: யானை பயிற்சிக்கு தனி பாசை இருக்கு. 'வர்தா' (அருகில் வருவது), 'வரியே' (முன்நோக்கி செல்வது), 'மண்டிசூட்' (இரண்டு கால்களை மடிப்பது), 'பைட்' (படுப்பது), 'ஜமாட்' (காட்டு யானைகள் கயிறுல கட்டிருக்கும்போது, அது ஓடாம இருக்க கும்கிய கயிற மிதிக்க சொல்வது), 'அதி' (கால்களை தூக்குவது), 'திரிகூட் டிரை' (கயிறை தந்தத்தில் சுற்றி வாயில் கடிப்பது).

பாகனிடம் கொஞ்சி விளையாடும் கும்கி யானை
பாகனிடம் கொஞ்சி விளையாடும் கும்கி யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த மொழிய அதுக்கு புரிய வைக்கறதுதான் பயிற்சியோட அடிப்படை. 20 வயசுக்கு மேல் உள்ள யானைகளா இருந்தா மூணு மாசத்துலயும், சின்ன வயசா இருந்தா ஒரு மாசத்துலயும் பயிற்சி குடுத்துருவோம். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 47 மொழிகள் கலந்துருக்கும்.

இதுதவிர யானைங்கள் கிட்ட எங்களோட மலசர், குறும்பர் பழங்குடி பாசையும் பேசுவோம். இதை தமிழ்லயே சொல்லி பழக்கலாம். ஆனா, அப்படி பழக்கினா யார் கூப்பிட்டாலும் போயிடும். அதனாலதான் இந்த மொழிய பயன்படுத்தறோம்.

குழந்தையாக மாறும் யானை: நம்ம யானைகள் மேல எவ்ளோ அன்பா இருக்கமோ, அதே மாதிரி யானைகளும் நம்ம மேல அன்பா இருக்கும். காட்டுக்குள் உணவு எடுக்க செல்லும்போது மற்ற விலங்குகளால் ஏற்படும் ஆபத்தான நேரத்துல யானைகள் நம்மள காப்பாத்தும். நாங்க எங்கயாச்சு வெளியே போயிட்டு வரும்போது வீட்ல குழந்தைகளுக்க தின்பண்டம் வாங்கற மாதிரி, யானைக்கு வாழை, தர்பூசணி வாங்கிவிட்டு வந்து குடுப்போம்.

பயிற்சிபெறும் கும்கியிடம் அன்பு செலுத்தும் பாகன்
பயிற்சிபெறும் கும்கியிடம் அன்பு செலுத்தும் பாகன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சமீபத்துல தாய்லாந்துக்கு போனோம். அவங்க யானைகளுக்கு பயிற்சி குடுக்க அங்குசம், ஈட்டி, கத்தி எல்லாம் வெச்சருக்காங்க. அது ரொம்ப ஆபத்து. கடைசி வரைக்கும் யானைக்கு நம்ம மேல நம்பிக்கையே வராது. இங்க ஒரு குச்சி தான் வெச்சுருப்போம். நம்மளோட ஒவ்வொரு அசைவும் யானைங்களுக்கு தெரியும். அதனால அன்பை பகிரும்போதுதான் நம்பிக்கை வரும். யானைகள் நம்மளை விட அறிவாளி. நம்பிக்கை மட்டும் வர வெச்சுட்டா, அந்த யானை நம்ம சொன்னா எதையும் கேட்கும்" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.