ETV Bharat / bharat

அமெரிக்கா பறந்த காதலி ; தற்கொலை செய்துகொண்ட ஆந்திர இளைஞர்

காதலித்த பெண் அமெரிக்காவுக்குப் பறந்த நிலையில், கனடாவில் வசித்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Nov 17, 2020, 9:57 PM IST

Updated : Nov 17, 2020, 10:04 PM IST

andhra-pradesh-man-dies-by-suicide-in-canada
andhra-pradesh-man-dies-by-suicide-in-canada

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ப்ரனாய் (வயது 29). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கனடாவில் பணிபுரிந்து வருகிறார்.

இவரும், கனடாவில் உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஆறு மாதங்களுக்கு முன்னதாக சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு சில நாள்களில் காதலாக மாற இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதைப்பற்றி குடும்பத்தினரிடம் கூறி, கரோனா சூழல் கட்டுக்குள் வந்தபின் திருமணம் செய்வதற்கு இருவரும் அனுமதியும் பெற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு திடீரென அமெரிக்காவுக்கு செல்வதற்கு விசா கிடைத்துள்ளது. தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்து ப்ரனாயின் காதல் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலி அமெரிக்காவுக்குப் பறந்த துயரம் தாளாமல், கடும் மனஅழுத்தத்தில் அவர் இருந்துள்ளார். இந்நிலையில் விஷ வாயுவை நுகர்ந்து ப்ரனாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ப்ரனாயின் உடல் இன்னும் ஒருவாரத்தில் சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திருமணத்துக்குச் சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த கொடூரம்!

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ப்ரனாய் (வயது 29). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கனடாவில் பணிபுரிந்து வருகிறார்.

இவரும், கனடாவில் உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஆறு மாதங்களுக்கு முன்னதாக சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு சில நாள்களில் காதலாக மாற இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதைப்பற்றி குடும்பத்தினரிடம் கூறி, கரோனா சூழல் கட்டுக்குள் வந்தபின் திருமணம் செய்வதற்கு இருவரும் அனுமதியும் பெற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு திடீரென அமெரிக்காவுக்கு செல்வதற்கு விசா கிடைத்துள்ளது. தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்து ப்ரனாயின் காதல் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலி அமெரிக்காவுக்குப் பறந்த துயரம் தாளாமல், கடும் மனஅழுத்தத்தில் அவர் இருந்துள்ளார். இந்நிலையில் விஷ வாயுவை நுகர்ந்து ப்ரனாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ப்ரனாயின் உடல் இன்னும் ஒருவாரத்தில் சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திருமணத்துக்குச் சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த கொடூரம்!

Last Updated : Nov 17, 2020, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.