ETV Bharat / bharat

அமராவதி பாத யாத்திரையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த 79 வயது விவசாயி - AMARAVATI PADAYATRA in AP

அமராவதி பாதயாத்திரையில் இளைஞர்களை விட 79 வயது விவசாயி ஒருவரின் நடை வேகமும், அவரது பழக்க வழக்கங்களும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமராவதி பாதயாத்திரையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த 79 வயது விவசாயி
அமராவதி பாதயாத்திரையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த 79 வயது விவசாயி
author img

By

Published : Sep 15, 2022, 9:30 AM IST

அமராவதி (ஆந்திரப்பிரதேசம்): ஆந்திரா மாநிலம் அமராவதியில் உள்ள அனந்தவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவாரவ் (79). விவசாயியான இவரின் மனைவி இறந்து விட்டார். இவரது மகனும், மகளும் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இவர் தற்போது அவரது சகோதரர்களின் அரவணைப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அமராவதி முதல் அரசவல்லி வரையிலான பாதயாத்திரையில் மாதவராவ் பயணித்து வருகிறார். அங்கு இவருடன் பயணிக்கும் பலரையும் இவரது செயல்பாடுகள் ஈர்த்துள்ளன. ஏனென்றால் மதிய உணவின்போது மற்றவர்கள் சோறு, பருப்பு மற்றும் பச்சைப்பயிறு ஆகியவற்றை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், மாதவராவ் நான்கு கேரட், நான்கு முருங்கைக்காய் மற்றும் இரண்டு எலுமிச்சை பழங்களை சாப்பிடுவதற்காக தயார்படுத்திக் கொண்டிருப்பார். மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, மாதவராவ் யோகா செய்து கொண்டிருப்பார்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே தூங்குகிறார். இதற்கு முன்னதாக அமராவதியில் இருந்து திருப்பதிக்கு 45 நாட்களில் சுமார் 1,400 கிலோமீட்டர் நடந்துள்ளார். மேலும் 66 நாட்களில் காசிக்கு பாதயாத்திரை சென்று வந்துள்ளார்.

இதுகுறித்து மாதவராவ் கூறுகையில், “ஒரு காலத்தில் விவசாயம் செய்தேன். கஷ்டப்பட்டு உழைத்து 5 வேளையும் சாப்பிட்டேன். 2007 ஆம் ஆண்டில் விவசாயத்தை நிறுத்திவிட்டேன். தியானம் கற்றுக்கொண்டேன். 2010 ஆம் ஆண்டு முதல், நான் என் தூக்கத்தை படிப்படியாகக் குறைத்தேன்.

அதன் பிறகு, நிலங்களை தலைநகருக்கு (அமராவதி) கொடுத்தேன். வீட்டிற்கு அருகில் இருந்தால் காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பேன். மதியம் ஒரு மணிக்கு மதிய உணவு சாப்பிடுவேன். பெரும்பாலான நேரத்தை யோகாசனம் மற்றும் தியானத்தில் செலவிடுகிறேன்.

ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டும் தூங்குங்கள். அதுவே போதுமானது. எனக்கு சர்க்கரை நோய் போன்ற எந்த வயோதிக பிரச்னையும் இல்லை. எவ்வளவு தூரம் நடந்தாலும் எனக்கு நடப்பதற்கே பிடிக்கும்' என்றார்.

இதையும் படிங்க: அமராவதி தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் 2ஆம் கட்டமாக பாத யாத்திரை!

அமராவதி (ஆந்திரப்பிரதேசம்): ஆந்திரா மாநிலம் அமராவதியில் உள்ள அனந்தவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவாரவ் (79). விவசாயியான இவரின் மனைவி இறந்து விட்டார். இவரது மகனும், மகளும் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இவர் தற்போது அவரது சகோதரர்களின் அரவணைப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அமராவதி முதல் அரசவல்லி வரையிலான பாதயாத்திரையில் மாதவராவ் பயணித்து வருகிறார். அங்கு இவருடன் பயணிக்கும் பலரையும் இவரது செயல்பாடுகள் ஈர்த்துள்ளன. ஏனென்றால் மதிய உணவின்போது மற்றவர்கள் சோறு, பருப்பு மற்றும் பச்சைப்பயிறு ஆகியவற்றை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், மாதவராவ் நான்கு கேரட், நான்கு முருங்கைக்காய் மற்றும் இரண்டு எலுமிச்சை பழங்களை சாப்பிடுவதற்காக தயார்படுத்திக் கொண்டிருப்பார். மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, மாதவராவ் யோகா செய்து கொண்டிருப்பார்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே தூங்குகிறார். இதற்கு முன்னதாக அமராவதியில் இருந்து திருப்பதிக்கு 45 நாட்களில் சுமார் 1,400 கிலோமீட்டர் நடந்துள்ளார். மேலும் 66 நாட்களில் காசிக்கு பாதயாத்திரை சென்று வந்துள்ளார்.

இதுகுறித்து மாதவராவ் கூறுகையில், “ஒரு காலத்தில் விவசாயம் செய்தேன். கஷ்டப்பட்டு உழைத்து 5 வேளையும் சாப்பிட்டேன். 2007 ஆம் ஆண்டில் விவசாயத்தை நிறுத்திவிட்டேன். தியானம் கற்றுக்கொண்டேன். 2010 ஆம் ஆண்டு முதல், நான் என் தூக்கத்தை படிப்படியாகக் குறைத்தேன்.

அதன் பிறகு, நிலங்களை தலைநகருக்கு (அமராவதி) கொடுத்தேன். வீட்டிற்கு அருகில் இருந்தால் காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பேன். மதியம் ஒரு மணிக்கு மதிய உணவு சாப்பிடுவேன். பெரும்பாலான நேரத்தை யோகாசனம் மற்றும் தியானத்தில் செலவிடுகிறேன்.

ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டும் தூங்குங்கள். அதுவே போதுமானது. எனக்கு சர்க்கரை நோய் போன்ற எந்த வயோதிக பிரச்னையும் இல்லை. எவ்வளவு தூரம் நடந்தாலும் எனக்கு நடப்பதற்கே பிடிக்கும்' என்றார்.

இதையும் படிங்க: அமராவதி தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் 2ஆம் கட்டமாக பாத யாத்திரை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.