ETV Bharat / bharat

மிதக்கும் எல்லைப்புற காவல்நிலையங்களை திறந்து வைத்தார் அமித்ஷா!

மேற்கு வங்கத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு மிதக்கும் எல்லைப்புற காவல்நிலையங்களை திறந்துவைத்தார். பின்னர், படகு ஆம்புலன்ஸ் வசதியையும் தொடங்கிவைத்தார்.

author img

By

Published : May 5, 2022, 7:06 PM IST

amit-shah
amit-shah

கொல்கத்தா: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றுள்ளார். இன்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஹிங்கல்கஞ்ச் பகுதியில், எல்லை பாதுகாப்புப் படைக்கான மிதக்கும் எல்லைப்புற காவல்நிலையங்களை திறந்துவைத்தார்.

பின்னர், அந்த காவல்நிலையங்களில் படகு ஆம்புலன்ஸ் வசதியை தொடங்கி வைத்தார். மேற்குவங்கத்தின் சுந்தர்பன்ஸ் பகுதியில் எளிதில் அணுக முடியாத பகுதிகளிலும் கண்காணிப்பை அதிகரிக்கும் நோக்கிலேயே மிதக்கும் எல்லைப்புற காவல்நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகு ஆம்புலன்ஸ் வசதியால் மக்களுக்கு எளிதில் மருத்துவ சேவை கிடைக்கும் என்றும், சுந்தன்பன்சின் சாஹேப் காலி முதல் பிகார் மாநிலத்தில் உள்ள ஷாம்ஷர் நகர் வரை இந்த படகு ஆம்புலன்ஸ் வசதி பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை டீன்பிகா செல்கிறார். பின்னர் கூச் பெஹர் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடவுள்ளார். பிறகு, கொல்கத்தாவில் உள்ள தனியார் ஹோட்டலில், பாஜக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார்.

பின்னர், மேற்குவங்கத்தின் பாரம்பரிய துர்கா பூஜைக்கு புனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்வில் கலந்துகொள்கிறார்.

இதையும் படிங்க: குஜராத்தில் ஆயுதங்கள் பதுக்கிய 10 பேர் கைது

கொல்கத்தா: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றுள்ளார். இன்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஹிங்கல்கஞ்ச் பகுதியில், எல்லை பாதுகாப்புப் படைக்கான மிதக்கும் எல்லைப்புற காவல்நிலையங்களை திறந்துவைத்தார்.

பின்னர், அந்த காவல்நிலையங்களில் படகு ஆம்புலன்ஸ் வசதியை தொடங்கி வைத்தார். மேற்குவங்கத்தின் சுந்தர்பன்ஸ் பகுதியில் எளிதில் அணுக முடியாத பகுதிகளிலும் கண்காணிப்பை அதிகரிக்கும் நோக்கிலேயே மிதக்கும் எல்லைப்புற காவல்நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகு ஆம்புலன்ஸ் வசதியால் மக்களுக்கு எளிதில் மருத்துவ சேவை கிடைக்கும் என்றும், சுந்தன்பன்சின் சாஹேப் காலி முதல் பிகார் மாநிலத்தில் உள்ள ஷாம்ஷர் நகர் வரை இந்த படகு ஆம்புலன்ஸ் வசதி பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை டீன்பிகா செல்கிறார். பின்னர் கூச் பெஹர் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடவுள்ளார். பிறகு, கொல்கத்தாவில் உள்ள தனியார் ஹோட்டலில், பாஜக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார்.

பின்னர், மேற்குவங்கத்தின் பாரம்பரிய துர்கா பூஜைக்கு புனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்வில் கலந்துகொள்கிறார்.

இதையும் படிங்க: குஜராத்தில் ஆயுதங்கள் பதுக்கிய 10 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.