ETV Bharat / bharat

அமர்நாத் மேக வெடிப்பு: 16 பேர் உயிரிழப்பு... 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 40 பேர் மாயம்....

author img

By

Published : Jul 9, 2022, 10:55 AM IST

Updated : Jul 9, 2022, 11:55 AM IST

ஸ்ரீநகரில் அமர்நாத் குகை அருகே உள்ள பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டித் தீர்த்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

அமர்நாத் மேகவெடிப்பு
அமர்நாத் மேகவெடிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமர்நாத் புனித யாத்திரை நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு அருகே நேற்று (ஜூலை 8) மாலை 5.30 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. மேகவெடிப்பால் அப்பகுதியில் மழை கொட்டித்தீர்த்த நிலையில், அமர்நாத் குகை கோயிலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் புனித குகை அருகே வெள்ளத்திற்கு ஒதுங்கிய 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

ஆனால், இந்த தீடீர் மேக வெடிப்பினால் 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 40 பேர் மாயமாகி உள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி நேற்று மாலை 5:30 மணியளவில் ஆரம்பித்து 6:30 மணிவரை ஏறத்தாழ ஒரு மணி நேரத்தில் 28மி.மீ., மழை அளவு அமர்நாத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் வெள்ளப்பெருக்கு : 16 பேர் உயிழப்பு... 15 ஆயிரம் பேர் மீட்கபட்டுள்ள நிலையில் 40 பேர் மாயம்....

இதையும் படிங்க: Video: வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து - 25 மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமர்நாத் புனித யாத்திரை நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு அருகே நேற்று (ஜூலை 8) மாலை 5.30 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. மேகவெடிப்பால் அப்பகுதியில் மழை கொட்டித்தீர்த்த நிலையில், அமர்நாத் குகை கோயிலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் புனித குகை அருகே வெள்ளத்திற்கு ஒதுங்கிய 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

ஆனால், இந்த தீடீர் மேக வெடிப்பினால் 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 40 பேர் மாயமாகி உள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி நேற்று மாலை 5:30 மணியளவில் ஆரம்பித்து 6:30 மணிவரை ஏறத்தாழ ஒரு மணி நேரத்தில் 28மி.மீ., மழை அளவு அமர்நாத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் வெள்ளப்பெருக்கு : 16 பேர் உயிழப்பு... 15 ஆயிரம் பேர் மீட்கபட்டுள்ள நிலையில் 40 பேர் மாயம்....

இதையும் படிங்க: Video: வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து - 25 மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

Last Updated : Jul 9, 2022, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.