கிளப்ஹவுஸ் என்ற புதிய சமூக வலைதளச் செயலி அன்மைக்காலமாக பலராலும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிளப்ஹவுஸ் விவாத நிகழ்வு ஒன்றில் பங்கேற்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சட்டப்பிரிவு 370 சர்ச்சையில் திக்விஜய சிங்
இந்த கிளப்ஹவுஸ் விவாதத்தில் பாகிஸ்தான் ஊடகவியாளர் ஒருவர் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்தை பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த திக்விஜய சிங், சட்டப்பிரிவு 370ஐ நீக்கியவிதம் மதசார்பின்மையின் அடிப்படையை மீறி நடத்திய நடவடிக்கை. இது மிகவும் வருந்தத்தக்க அம்சமாகும்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றால் இது குறித்து நிச்சயம் மறு பரிசீலனை செய்யும் என பதிலளித்துள்ளார். திக்விஜய சிங்கின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் லீக் ஆகி தற்போது பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்படுகிறது.