ETV Bharat / bharat

Gyanvapi mosque: ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுமதி! அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Aug 3, 2023, 11:21 AM IST

Updated : Aug 3, 2023, 11:40 AM IST

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை(ASI) ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

பிரயாக்ராஜ் : ஞானவாபி மசூதி வழக்கில், தொழுகை கூட வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த ஆய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்து உள்ளது. இந்த மசூதியை அஞ்சுமன் இன்டெஜாமியா குழு நிர்வகித்து வருகிறது. இந்த மசூதியின் வளாகத்தில் சிரிங்கர் கவுரி சன்னதி உள்ளது. இங்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்கள் சென்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கவுரி சன்னதிக்கு தினமும் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி, 5 பெண்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு மசூதி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆய்வு முடிவில் மசூதி வளாகத்தில் சிவலிங்கம் போன்ற பொருள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த மசூதி நிர்வாகம், தொழுகைக்கு வருபவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட நீரூற்று என்றும் சிவலிங்கம் இல்லை என்றும் முறையிட்டது. இதையடுத்து மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனிடையே எதிர் மனுதாரர்கள் தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வ ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த ஜூலை 24ஆம் தெதி ஞானவாபி மசூதி அமைந்து இருக்கும் இடத்திற்கு வந்த இந்திய தொல்லியல் துறையினர், அய்வு நடத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த இடைக்கால தடை விதித்தனர். அதேநேரம் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மசூதி நிர்வாகம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முறையிடுமாறு உச்ச நீதிமன்ற தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த அனுமதி மறுப்பது தொடர்பான விசாரணை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட். 3) வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.

இதையும் படிங்க : "ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அக்டோபர் முதல் 28% ஜிஎஸ்டி" - நிதியமைச்சர் அறிவிப்பு!

பிரயாக்ராஜ் : ஞானவாபி மசூதி வழக்கில், தொழுகை கூட வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த ஆய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்து உள்ளது. இந்த மசூதியை அஞ்சுமன் இன்டெஜாமியா குழு நிர்வகித்து வருகிறது. இந்த மசூதியின் வளாகத்தில் சிரிங்கர் கவுரி சன்னதி உள்ளது. இங்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்கள் சென்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கவுரி சன்னதிக்கு தினமும் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி, 5 பெண்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு மசூதி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆய்வு முடிவில் மசூதி வளாகத்தில் சிவலிங்கம் போன்ற பொருள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த மசூதி நிர்வாகம், தொழுகைக்கு வருபவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட நீரூற்று என்றும் சிவலிங்கம் இல்லை என்றும் முறையிட்டது. இதையடுத்து மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனிடையே எதிர் மனுதாரர்கள் தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதி வளாகத்தில் அறிவியல் பூர்வ ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த ஜூலை 24ஆம் தெதி ஞானவாபி மசூதி அமைந்து இருக்கும் இடத்திற்கு வந்த இந்திய தொல்லியல் துறையினர், அய்வு நடத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணி வரை மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த இடைக்கால தடை விதித்தனர். அதேநேரம் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மசூதி நிர்வாகம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முறையிடுமாறு உச்ச நீதிமன்ற தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த அனுமதி மறுப்பது தொடர்பான விசாரணை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட். 3) வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.

இதையும் படிங்க : "ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அக்டோபர் முதல் 28% ஜிஎஸ்டி" - நிதியமைச்சர் அறிவிப்பு!

Last Updated : Aug 3, 2023, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.