ஹைதராபாத்: அனைத்து இந்திய எஸ்சி, எஸ்டி கூட்டமைப்பு சார்பில் சமத்துவத்துக்கான ஒற்றுமை என்ற நிகழ்ச்சி நேற்று (ஜூலை 21) ரவீந்திரபாரதி அரங்கில் நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் தேசியத் தலைவர் உதித் ராஜ் பேசுகையில், "மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. பொது நிறுவனங்களை தனியார் மயமாக்க முயற்சிக்கிறது." என்று தெரிவித்தார். அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பை மீற முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.