ETV Bharat / bharat

அக்னிபத் போராட்டம் - கண்காணிக்கப்படும் இளைஞர்களின் வாட்ஸ்அப் குழுக்கள்

author img

By

Published : Jun 19, 2022, 12:16 PM IST

Updated : Jun 19, 2022, 12:27 PM IST

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களை மீண்டும் தொடர விடாமல் தடுப்பதற்காக பல மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் பல பயிற்சி மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அக்னிபத் போராட்டம்- கண்காணிக்கப்படும் இளைஞர்களின் வாட்சப் குரூப்
agni path protest

டெல்லி:மத்திய அரசின் முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபத்திற்கு பல மாநிலங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பிகார் மற்றும் தெலங்கானாவில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் அதனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசம் போன்ற வேறு சில மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. பல நடவடிக்கைகளுக்குப் பின்னர் போராட்டக்காரர்கள் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டனர்.

பாட்னாவில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் சில பயிற்சி மையங்கள் இந்தப் போராட்டத்தை தூண்டியதற்கான காரணங்கள் கிடைத்தன. மேலும் கைது செய்தவர்களின் வாட்ஸ்அப் மெசேஜ்களில் வன்முறையைத் தூண்டும் குறுஞ்செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. பாட்னா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சிங் கூறுகையில், 'சிசிடிவியில் பதிவான வீடியோக்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்கான தூண்டுதலில் ஈடுபட்ட 7 பயிற்சி மையங்களை கண்டறிந்துள்ளோம்’ என்றார்.

இதனையடுத்து போராட்டங்கள் நடைபெற்ற மற்ற மாநிலங்களான தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ஹரியானா, ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் காவல் துறையினர் இளைஞர்களின் வாட்ஸ்அப் குழுக்களை கண்காணித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறுவதற்கு சில விஷக்கிருமிகள் தூண்டுதலே காரணம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:அக்னிபத் திட்ட விவரங்களை வெளியிட்ட இந்திய விமானப்படை

டெல்லி:மத்திய அரசின் முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபத்திற்கு பல மாநிலங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பிகார் மற்றும் தெலங்கானாவில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் அதனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசம் போன்ற வேறு சில மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. பல நடவடிக்கைகளுக்குப் பின்னர் போராட்டக்காரர்கள் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டனர்.

பாட்னாவில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் சில பயிற்சி மையங்கள் இந்தப் போராட்டத்தை தூண்டியதற்கான காரணங்கள் கிடைத்தன. மேலும் கைது செய்தவர்களின் வாட்ஸ்அப் மெசேஜ்களில் வன்முறையைத் தூண்டும் குறுஞ்செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. பாட்னா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சிங் கூறுகையில், 'சிசிடிவியில் பதிவான வீடியோக்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்கான தூண்டுதலில் ஈடுபட்ட 7 பயிற்சி மையங்களை கண்டறிந்துள்ளோம்’ என்றார்.

இதனையடுத்து போராட்டங்கள் நடைபெற்ற மற்ற மாநிலங்களான தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ஹரியானா, ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் காவல் துறையினர் இளைஞர்களின் வாட்ஸ்அப் குழுக்களை கண்காணித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறுவதற்கு சில விஷக்கிருமிகள் தூண்டுதலே காரணம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:அக்னிபத் திட்ட விவரங்களை வெளியிட்ட இந்திய விமானப்படை

Last Updated : Jun 19, 2022, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.