ETV Bharat / bharat

பாய் பிரண்டுடன் வராவிட்டால் கெட் அவுட்.. கல்லூரி நிர்வாகம் பெயரில் நோட்டீஸ்

author img

By

Published : Jan 28, 2023, 10:45 PM IST

காதலர் தினத்தன்று ஆண் நண்பருடன் வராவிட்டால் கல்லூரிக்குள் அனுமதி கிடையாது என நிர்வாகம் தரப்பில் வெளியானதாக நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலர் தினம்
காதலர் தினம்

நபராங்பூர்: ஒடிசாவில் காதலர் தினத்தன்று பாய் பிரண்டுடன் வரா விட்டால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி கிடையாது என தனியார் கல்லூரி நிர்வாகம் ஒட்டியதாக சமூக வலைதளங்களில் வெளியான நோட்டீஸ் வைரலாகி வருகிறது. நபராங்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி தகவல் பலகையில் விநோதமான நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

அதில், பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று மாணவிகள் அனைவரும் கட்டாயம் தங்கள் ஆண் நண்பருடன் கல்லூரி வர வேண்டும் என்றும், பாய் பிரண்டுடன் வராத மாணவிகளுக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவிகளின் பாதுகாப்பு கருதி ஆண் நண்பருடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

பாய் பிரண்டுடன் அண்மையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கல்லூரி வாசலில் காண்பிக்க வேண்டும் என்றும் அந்த புகைப்படங்கள் அடையாள அட்டைக்கு இணையாக கருதப்படும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு எல்லாம் மேலாக நோட்டீசில் கல்லூரி தலைமை ஆசிரியரின் கையொப்பம் இடப்பட்டு இருந்ததால் நோட்டீஸ் உண்மையானது என அனைவராலும் கருதப்பட்டது.

நோட்டீஸ் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இதையடுத்து தகவல் பலகையில் இருந்து நோட்டீஸ் உடனடியாக அகற்றப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தலைமை ஆசிரியை, நோட்டீஸ் போலியானது என்றும், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் போலியாக நோட்டீசை தயாரித்து கல்லூரி தகவல் பலகையில் ஒட்டியதாகவும் தெரிவித்தார்.

நோட்டீஸ் ஒட்டிய நபர் குறித்து விசாரித்து வருவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இதை போலீசார் அளவுக்கு கொண்டு சென்று பெரிய பிரச்சினையாக்க விரும்பிவில்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: தினமும் 15 லிட்டர் பால் குடிக்கும் எருமை.. விலை எவ்வளவு தெரியுமா?

நபராங்பூர்: ஒடிசாவில் காதலர் தினத்தன்று பாய் பிரண்டுடன் வரா விட்டால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி கிடையாது என தனியார் கல்லூரி நிர்வாகம் ஒட்டியதாக சமூக வலைதளங்களில் வெளியான நோட்டீஸ் வைரலாகி வருகிறது. நபராங்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி தகவல் பலகையில் விநோதமான நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

அதில், பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று மாணவிகள் அனைவரும் கட்டாயம் தங்கள் ஆண் நண்பருடன் கல்லூரி வர வேண்டும் என்றும், பாய் பிரண்டுடன் வராத மாணவிகளுக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவிகளின் பாதுகாப்பு கருதி ஆண் நண்பருடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

பாய் பிரண்டுடன் அண்மையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கல்லூரி வாசலில் காண்பிக்க வேண்டும் என்றும் அந்த புகைப்படங்கள் அடையாள அட்டைக்கு இணையாக கருதப்படும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு எல்லாம் மேலாக நோட்டீசில் கல்லூரி தலைமை ஆசிரியரின் கையொப்பம் இடப்பட்டு இருந்ததால் நோட்டீஸ் உண்மையானது என அனைவராலும் கருதப்பட்டது.

நோட்டீஸ் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இதையடுத்து தகவல் பலகையில் இருந்து நோட்டீஸ் உடனடியாக அகற்றப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தலைமை ஆசிரியை, நோட்டீஸ் போலியானது என்றும், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் போலியாக நோட்டீசை தயாரித்து கல்லூரி தகவல் பலகையில் ஒட்டியதாகவும் தெரிவித்தார்.

நோட்டீஸ் ஒட்டிய நபர் குறித்து விசாரித்து வருவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இதை போலீசார் அளவுக்கு கொண்டு சென்று பெரிய பிரச்சினையாக்க விரும்பிவில்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: தினமும் 15 லிட்டர் பால் குடிக்கும் எருமை.. விலை எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.