ETV Bharat / bharat

அக்னிபத் திட்டம் - விமானப்படையில் சேர சுமார் 7.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப்படையில் சேர, சுமார் ஏழரை லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக விமானப்படை தலைவர் விஆர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 17, 2022, 10:23 PM IST

IAF Chief
IAF Chief

டெல்லி: அக்னிபத் திட்டத்தை கடந்த 14ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படும் அக்னி வீரர்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே சேவையாற்ற முடியும். நான்கு ஆண்டுகள் சேவை முடித்தவர்களில் 25 விழுக்காடு பேருக்கு தகுதியின் அடிப்படையில், ராணுவத்தில் நிரந்தர வேலை கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்வதற்கான வயதுவரம்பு 17.5 வயது முதல் 21 வயது வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த வயது வரம்பு 23ஆக அதிகரிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு பிகார், தெலங்கானா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புத்தெரிவித்தன. இத்திட்டத்தை ரத்து செய்யும்படி எதிர்க்கட்சி எம்.பிக்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப்படையில் சேர, ஏழரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக விமானப்படை தலைவர் விஆர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஆர் சவுத்ரி கூறுகையில், "அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கியது. இதுவரை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது இளைஞர்களின் ஆர்வத்தைக் காட்டுகிறது.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால், அக்னி வீரர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளை திட்டமிட்டபடி சரியான நேரத்தில் முடிப்பது சவாலான விஷயம்தான். விமானப்படையை பொறுத்தவரை, ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 6 லட்சத்து 31 ஆயிரத்து 528 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

ஆனால், இந்த எண்ணிக்கையை அக்னிபத் திட்டம் முறியடித்துள்ளது. அக்னிபத் திட்டம் மூலம் விமானப்படையில் சேர 7 லட்சத்து 49 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த ஆண்டு விமானப்படை தின(அக்.8) பேரணி சண்டிகரில் நடைபெறவுள்ளது. மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் நாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் எப்போதும் தலைநகரிலேயே நடத்தப்படுவதால், அவை பிற மாநிலங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்படி, விமானப்படை தின பேரணியை கொண்டாட சண்டிகரை தேர்வு செயதுள்ளோம். ரஃபேல், Su-30,மிராஜ் 2000 உள்ளிட்ட போர் விமானங்கள் பேரணியில் இடம்பெறும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:'அக்னிபத்' இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் ஒரு திட்டம் - அஸ்ஸாம் காங்கிரஸ் எம்.பி., கௌரவ் கோகாய்

டெல்லி: அக்னிபத் திட்டத்தை கடந்த 14ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படும் அக்னி வீரர்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே சேவையாற்ற முடியும். நான்கு ஆண்டுகள் சேவை முடித்தவர்களில் 25 விழுக்காடு பேருக்கு தகுதியின் அடிப்படையில், ராணுவத்தில் நிரந்தர வேலை கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்வதற்கான வயதுவரம்பு 17.5 வயது முதல் 21 வயது வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த வயது வரம்பு 23ஆக அதிகரிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு பிகார், தெலங்கானா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புத்தெரிவித்தன. இத்திட்டத்தை ரத்து செய்யும்படி எதிர்க்கட்சி எம்.பிக்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப்படையில் சேர, ஏழரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக விமானப்படை தலைவர் விஆர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஆர் சவுத்ரி கூறுகையில், "அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கியது. இதுவரை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது இளைஞர்களின் ஆர்வத்தைக் காட்டுகிறது.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால், அக்னி வீரர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளை திட்டமிட்டபடி சரியான நேரத்தில் முடிப்பது சவாலான விஷயம்தான். விமானப்படையை பொறுத்தவரை, ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 6 லட்சத்து 31 ஆயிரத்து 528 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

ஆனால், இந்த எண்ணிக்கையை அக்னிபத் திட்டம் முறியடித்துள்ளது. அக்னிபத் திட்டம் மூலம் விமானப்படையில் சேர 7 லட்சத்து 49 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த ஆண்டு விமானப்படை தின(அக்.8) பேரணி சண்டிகரில் நடைபெறவுள்ளது. மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் நாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் எப்போதும் தலைநகரிலேயே நடத்தப்படுவதால், அவை பிற மாநிலங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்படி, விமானப்படை தின பேரணியை கொண்டாட சண்டிகரை தேர்வு செயதுள்ளோம். ரஃபேல், Su-30,மிராஜ் 2000 உள்ளிட்ட போர் விமானங்கள் பேரணியில் இடம்பெறும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:'அக்னிபத்' இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் ஒரு திட்டம் - அஸ்ஸாம் காங்கிரஸ் எம்.பி., கௌரவ் கோகாய்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.