ஜம்மு-காஷ்மீரில் 2020ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில், போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த தாக்குதல்களில் 58 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதில், ஜனவரியில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும், பிப்ரவரி மாதத்தில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், மார்ச் மாதத்தில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட 58 பேரில், 42 பேர் பயங்கரவாதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 24 பயங்கரவாதிகள் டி.ஆர்.எப் (TRF) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 13 பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவர் அல்-பத்ர் (Al-Badr)அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பயங்கரவாதிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.