ETV Bharat / bharat

சத்தீஸ்கரில் தொடரும் IED குண்டுவெடிப்பு சம்பவங்கள்.. 2 பிஎஸ்எஃப் வீரர்கள் படுகாயம்..

author img

By

Published : Mar 28, 2023, 7:11 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் IED குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 2 எல்லை காவல் படை வீரர்கள் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சத்தீஸ்கரில் IED குண்டுவெடிப்பு
சத்தீஸ்கரில் IED குண்டுவெடிப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நக்சலைட் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பிஜாப்பூர் பகுதியில் நக்சலைட்களுக்கும், பாதுகாப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த மோதலில் நக்சலைட்கள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

மறுபுறம் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 5ஆம் தேதி பஸ்தாருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இவரது வருகைக்கு பின் மீண்டும் நக்சலைட்டுகள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அதிகரித்துள்ளனர்.

அந்த வகையில், நேற்று (மார்ச் 27) பிஜப்பூரில் IED குண்டு வெடிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (மார்ச் 28) கான்கேரில் மற்றொரு IED குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 2 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் விமானம் மூலம் ராய்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, துடா மற்றும் சில்பராஸ் ராணுவ முகாம்களுக்கு இடையே உள்ள கக்பராஸ் டெக்ரி பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணி செல்லும்போது அவர்கள் புதைக்கப்பட்டிருந்த IED குண்டு வெடிப்பில் சிக்கினர். அதில் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு கொய்லிபேடா சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று, பிஜாப்பூரின் மிரட்டூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நக்சலைட்டுகளால் புதைக்கப்பட்ட IED குண்டு வெடித்து சத்தீஸ்கர் ஆயுதப் படையை சேர்ந்த வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இதே நாளில் எடெபால் ராணுவ முகாமில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெக்ரியில் மற்றொரு IED குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதில், உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார்.

இதையும் படிங்க: "ஏகே 47" ரகத்தில் இருந்து பிஸ்டலுக்கு மாறும் பயங்கரவாதிகள்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நக்சலைட் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பிஜாப்பூர் பகுதியில் நக்சலைட்களுக்கும், பாதுகாப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த மோதலில் நக்சலைட்கள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

மறுபுறம் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 5ஆம் தேதி பஸ்தாருக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இவரது வருகைக்கு பின் மீண்டும் நக்சலைட்டுகள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அதிகரித்துள்ளனர்.

அந்த வகையில், நேற்று (மார்ச் 27) பிஜப்பூரில் IED குண்டு வெடிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (மார்ச் 28) கான்கேரில் மற்றொரு IED குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 2 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் விமானம் மூலம் ராய்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, துடா மற்றும் சில்பராஸ் ராணுவ முகாம்களுக்கு இடையே உள்ள கக்பராஸ் டெக்ரி பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணி செல்லும்போது அவர்கள் புதைக்கப்பட்டிருந்த IED குண்டு வெடிப்பில் சிக்கினர். அதில் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு கொய்லிபேடா சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று, பிஜாப்பூரின் மிரட்டூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நக்சலைட்டுகளால் புதைக்கப்பட்ட IED குண்டு வெடித்து சத்தீஸ்கர் ஆயுதப் படையை சேர்ந்த வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இதே நாளில் எடெபால் ராணுவ முகாமில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெக்ரியில் மற்றொரு IED குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதில், உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார்.

இதையும் படிங்க: "ஏகே 47" ரகத்தில் இருந்து பிஸ்டலுக்கு மாறும் பயங்கரவாதிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.