சென்னை: சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மானிய கோரிக்கை விவாதத்தில் பதிலுரையில் பேசினார். அதில் ஊராட்சிகளைப் பேரூராட்சியாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் மாற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்க நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை, ஆகிய நான்கு நகராட்சிகள் 20 நாட்களுக்குள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். மக்கள் தொகை அதிகம் இருப்பதன் காரணமாகவே இந்த ஊராட்சிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் தற்போது இருக்கும் 490 பேரூராட்சிகள் 700 பேரூராட்சிகளாக அதிகரிக்கப்படும் எனவும் தற்போது இருக்கும் 138 நகராட்சிகள் 159 நகராட்சிகளாக ஆக உயரும் எனவும் தற்போது இருக்கும் 21 மாநகராட்சிகள் 25 மாநகராட்சிகளாக உயர்த்தப்பட உள்ளது எனவும் கூறினார்.