சென்னை: நடத்த முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் நெல்லையில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸிடம் போட்டியிட்டு 1,65,620 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில், தேர்தல் முடிந்து 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தொடர வேண்டும் என்ற நடைமுறையின் படி, நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தேர்தல் ஆணையம் அனுமதித்த தொகையை விட கூடுதலாக செலவு செய்துள்ளார், நேர்மையான முறையில் வெற்றி பெறவில்லை என்பதால் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட் ப்ரூஸ் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, ராபர்ட் புரூஸ் மற்றும் தேர்தல் ஆணையம் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.