ETV Bharat / snippets

கான்கிரீட் கலவை கொண்டு சென்ற லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல் - 4 பேர் காயம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 2:50 PM IST

விபத்து தொடர்பான புகைப்படம்
விபத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கிண்டியிலிருந்து கோயம்பேடு நோக்கி கான்கிரீட் கலவை கொண்டு செல்லும் டேங்கர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். லாரியானது கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, பிரேக் பிடிக்காததால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் 2 ஆண்கள், 1 பெண், 1 குழந்தை என 4 பேர் காயம் அடைந்தனர். மேலும், இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் என சுமார் ஏழு வாகனங்கள் பலத்த சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.

மேலும், லாரியை இயக்கிய சுரேஷை கைது செய்து, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் கோயம்பேடு அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கிண்டியிலிருந்து கோயம்பேடு நோக்கி கான்கிரீட் கலவை கொண்டு செல்லும் டேங்கர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். லாரியானது கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, பிரேக் பிடிக்காததால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் 2 ஆண்கள், 1 பெண், 1 குழந்தை என 4 பேர் காயம் அடைந்தனர். மேலும், இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் என சுமார் ஏழு வாகனங்கள் பலத்த சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.

மேலும், லாரியை இயக்கிய சுரேஷை கைது செய்து, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் கோயம்பேடு அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.