ETV Bharat / snippets

மின்சாரம் தாக்கி கூட்டு குடிநீர் திட்ட ஒப்பந்த பணியாளர் பலி! நெல்லையில் சோகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 24 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

நெல்லை: ஆலங்குளம் அருகே உள்ள கண்டபட்டி பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ். 24 வயதான இவர் முக்கூடல் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் கூட்டு குடிநீர் திட்டத்தில் ஒப்பந்த பணியாளராக கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வந்தார். கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் திறப்பதற்காக தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமான உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முக்கூடல் அருகே அமைந்துள்ள உறை கிணற்றில் பழுது ஏற்பட்டதால், நேற்று அதை சரி பார்க்கும் பணியில் லாரன்ஸ் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் லாரன்ஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட லாரன்ஸ் உடல், நதிக்குள் மூழ்கியதால், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சேரன்மகாதேவி தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். பின் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நெல்லை: ஆலங்குளம் அருகே உள்ள கண்டபட்டி பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ். 24 வயதான இவர் முக்கூடல் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் கூட்டு குடிநீர் திட்டத்தில் ஒப்பந்த பணியாளராக கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வந்தார். கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் திறப்பதற்காக தாமிரபரணி நதிக்கரையில் ஏராளமான உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முக்கூடல் அருகே அமைந்துள்ள உறை கிணற்றில் பழுது ஏற்பட்டதால், நேற்று அதை சரி பார்க்கும் பணியில் லாரன்ஸ் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் லாரன்ஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட லாரன்ஸ் உடல், நதிக்குள் மூழ்கியதால், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சேரன்மகாதேவி தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். பின் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.