ETV Bharat / snippets

வேலூரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

மருத்துவமனை, இறந்த தமிழ்வாணன்
மருத்துவமனை, இறந்த தமிழ்வாணன் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம், மேல்முடியனூரைச் சேர்ந்த விவசாயி சிவகுமார் என்பவரின் மகன் தமிழ்வாணன், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 11ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அம்மாபாளையம் பகுதியில் விபத்து ஏற்பட்டு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மூளைச் சாவடைந்தார்.

இதனை அடுத்து, மாணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்படி மருத்துவர்கள் இதயம் சென்னையில் உள்ள எம்.ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் இடது சிறுநீரகம் சி.எம்.சி ராணிப்பேட்டை மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் சென்னை அப்போலோ மற்றும் ராணிப்பேட்டை மருத்துவமனைக்கும், கண்களை வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம், மேல்முடியனூரைச் சேர்ந்த விவசாயி சிவகுமார் என்பவரின் மகன் தமிழ்வாணன், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 11ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அம்மாபாளையம் பகுதியில் விபத்து ஏற்பட்டு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மூளைச் சாவடைந்தார்.

இதனை அடுத்து, மாணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்படி மருத்துவர்கள் இதயம் சென்னையில் உள்ள எம்.ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் இடது சிறுநீரகம் சி.எம்.சி ராணிப்பேட்டை மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் சென்னை அப்போலோ மற்றும் ராணிப்பேட்டை மருத்துவமனைக்கும், கண்களை வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.