இரு குடும்பங்களிடையே மோதல்.. அரிவாளுடன் மிரட்டல் விடுத்த இளைஞர் - வைரலாகும் வீடியோ! - Family fight in Tirupathur - FAMILY FIGHT IN TIRUPATHUR
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-05-2024/640-480-21394222-thumbnail-16x9-fight.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : May 5, 2024, 10:23 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேசன் என்பவரின் மனைவி மீனா, அவரது தங்கை பிரியா மற்றும் உறவினர் தேவி ஆகியோருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரின் மனைவி மீனாட்சி என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் மீனா மற்றும் மீனாட்சி ஆகியோருக்கு மத்தியில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மீனாட்சியின் மகன்கள் கோபி (23) மற்றும் சரவணன் (19) ஆகிய இருவரும், மீனா மற்றும் அவரது உறவினர்களான தேவி, பிரியா ஆகிய மூவரையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, இரு குடும்பங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட தகராறின் போது, மீனாட்சியின் மகன்களுள் ஒருவர் அரிவாளுடன் மீனாவின் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியபடி மிரட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.