திருவண்ணாமலை கூத்தாண்டவர் கோயில் பாஞ்சாலி அம்மன் திருமணம் நிகழ்ச்சி கோலாகலம்! - koothandavar temple festival - KOOTHANDAVAR TEMPLE FESTIVAL
🎬 Watch Now: Feature Video


Published : Apr 15, 2024, 7:59 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது, கூத்தாண்டவர் திருக்கோயில். இங்கு, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் கூத்தாண்டவர் தேர் திருவிழா 20 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், இந்தாண்டு 202வது தேர் திருவிழா கடந்த மாதம் தொடங்கியது. 20 நாட்கள் நடைபெறும் சித்திரை தேர் திருவிழாவில், நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில், 10ஆம் நாள் நிகழ்ச்சியாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் திருமணம் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீ கூத்தாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வேத மந்திரம் முழங்க யாகம் நடைபெற்று ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் பெண் அழைப்பு , திருமண நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற திருமணம் ஆகாத பெண்களுக்கு மாங்கல்யம் வழங்கப்பட்டது. இறுதியாக, திருவீதியுலா நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான 20வது நாள் 'கூத்தாண்டவர் தேர் திருவிழா' மிக விமரிசையாக நடைபெறும். இதில் ஏராளமான திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து தேரை இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.