thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 10:34 PM IST

ETV Bharat / Videos

குன்னூரில் குட்டியுடன் சுற்றித்திரியும் 4 காட்டு யானைகள்.. பயத்தில் உரைந்துள்ள பொதுமக்கள்.. - wild elephants strolled in Coonoor

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதாலும் ஆறு மற்றும் குளங்கள் வறண்டு வருவதால், வனவிலங்குகள் நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் மலை மாவட்டத்தை நோக்கிப் படையெடுத்து வருகிறது.

இந்த நிலையில், மரப்பாலாம், குறும்பாடி மற்றும் பர்லியார் பகுதியில் முகாமிட்டிருந்த 4 காட்டு யானைகள் குன்னூர் அருகே கே.என்.ஆர் நந்தகோபால் பாலம் பகுதியில் முகாமிட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

காட்டு யானைகள் நகரப் பகுதிக்கு வராமல் தடுப்பதற்காக, வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர்கள் திலீப் ராம்குமார், வனக்காவலர் ஏசுராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் 20க்கும் மேற்பட்டோர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து யானைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விரைவில் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்கே விரட்டுவதற்கான முழு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொழுது கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும், யானைகளைக் கண்டவுடன் அருகே சென்று செல்பி எடுப்பது போன்ற விசமச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் மேலும், யானைகளைக் கண்டவுடன் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.