டெல்லி: சூரியனை ஆய்வு செய்ய கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
படிப்படியாக சுற்றுவட்ட பாதைகளை கடந்த ஆதித்ய எல் 1 விண்கலம் சூரியன் குறித்து அவ்வப்போது தவல்களை பூமிக்கு அனுப்பி வைந்தது. இந்நிலையில், பூமியில் இருந்து ஏறத்தாழ 15 லட்சம் கிலோ மீட்டர் துாரம் 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் கடந்த ஜனவரி மாதம் நிலைநிறுத்தப்பட்டது.
Aditya-L1: Celebration of First Orbit Completion 🌞🛰️
— ISRO (@isro) July 2, 2024
Today, Aditya-L1 completed its first halo orbit around the Sun-Earth L1 point. Inserted on January 6, 2024, it took 178 days, to complete a revolution.
Today's station-keeping manoeuvre ensured its seamless transition into… pic.twitter.com/yB6vZQpIvE