ETV Bharat / technology

கடன் வாங்கினால் கழுத்தை நெரிக்கும் செயலிகள்.. தப்ப முடியுமா? வழி என்ன? - how to spot fake loan apps

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 3, 2024, 5:17 PM IST

Fake Loan App Problems: ஆன்லைனில் கடன் வாங்கிவிட்டு அல்லல் படுபவரா நீங்கள்? அல்லது ஆன்லைனில் கடன் வாங்கலாமா என யோசிப்பவரா நீங்கள்? அப்போ இந்த கட்டுரை உங்களுக்கானதுதான்.

கடன் செயலிகள் தொடர்பான கோப்புப்படம்
கடன் செயலிகள் தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Getty Images)

சென்னை: இன்றைய ஆன்லைன் யுகத்தில் அனைத்துமே விரல்நுனியில் கிடைக்கின்றன. தீர்வுகள் கிடைப்பது போன்றே பிரச்னைகளும் விரல் நுனியில் தொடங்கி விடுகின்றன. அவசர தேவைகளுக்காக நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியது போக இன்று ஆன்லைனில் கடன் வாங்குபவர்கள் தான் அதிகம். இதில் முறைப்படுத்தப்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் லோன் வாங்கினால் பிரச்னை இல்லை. ஆனால், முறைப்படுத்தப்படாத செயலிகளில் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால் கூட சிக்கல்தான்.

கடன் செயலிகள் எப்படி இயங்குகின்றன? நீங்கள் வங்கிக்கடனுக்காக இணையத்தில் தேடினால், அல்காரிதம் அடிப்படையில் இந்த லோன் தொடர்பான விளம்பரங்கள் உங்களைத் தேடி வரும். சில நேரங்களில் இணையத்தில் நீங்கள் பகிர்ந்து கொண்டதன் அடிப்படையில் உங்கள் மொபைல் எண்ணுக்கே விளம்பரம் வரும். இவ்வாறு வரும் விளம்பரங்களில், அங்கீகாரம் பெற்ற செயலிகளும் இருக்கலாம், அங்கீகாரமற்ற செயலிகளும் இருக்கலாம். ஒரு வேளை நீங்கள் தவறான செயலிகளை தேர்வு செய்தால் என்ன நிகழும் என்பது கற்பனைக்கும் எட்டாதது.

உங்கள் போன் இனி உங்களுடையது இல்லை: இப்படிப்பட்ட செயலிகளை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் போதே பல்வேறு அனுமதிகளைக் கேட்கும். உங்கள் போனில் உள்ள தொலைபேசி எண்களை எடுத்துக் கொள்வது, புகைப்படங்கள் இருக்கும் கேலரிக்கான அனுமதி, எஸ்எம்எஸ் அனுமதி, கால் ரெக்கார்டு அனுமதி போன்றவற்றைக் கேட்கும். இவை எல்லாவற்றையும் கொடுத்துவிட்டால் நீங்கள் கடன் பெறும் போதே உங்கள் போனின் தகவல் முழுவதும் அவர்கள் வசம் சென்றுவிடும்.

இனி மிரட்டல் ஆரம்பம்: உதாரணத்திற்கு நீங்கள் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்குவதாக வைத்துக் கொள்வோம், இதற்கு பிராசசிங் ஃபீஸ் உட்பட பல கட்டணங்களை கழித்துக் கொண்டு ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை உங்கள் அக்கவுண்டிற்கு வரும். அதிகபட்சமாக கடனை திரும்பச் செலுத்த சில நாட்களே அனுமதி கொடுப்பார்கள். இந்நாட்களில் நாள்தோறும் வட்டி ஏறும். ஒரு வாரத்தின் முடிவில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை திரும்பச் செலுத்துமாறு மிரட்டுவார்கள். நீங்கள் ஏற்கனவே பணம் செலுத்தியிருந்தாலும் இதனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மிரட்டல் வரும்.

எந்த எல்லைக்கும் செல்வார்கள்: தொந்தரவு தாளாமல் நீங்கள் பதிலளிக்காமல் இருந்தால், அடுத்த கட்டமாக உங்கள் மொபைல் போனிலிருந்து ஏற்கனவே எடுத்து வைத்துள்ள தொலைபேசி எண்களுக்கு அவதூறான மெசேஜ்களை அனுப்புவார்கள். உங்கள் நண்பர்களுக்கும், அலுவலக அதிகாரிகளுக்கும், உறவினர்களுக்கும் என நூற்றுக்கணக்கில் மெசேஜ்கள் செல்லும். இதனால் பல முனைகளிலிருந்து உங்களுக்கு அழுத்தம் ஏற்படும். இதற்கெல்லாம் உச்சமாக, கேலரியிலிருந்து எடுத்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தும் மிரட்டிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

என்ன செய்ய வேண்டும்? வேறு வழியின்றி இந்த கடன் வலையில் நீங்கள் சிக்கியிருந்தால் பதற்றப்படாதீர்கள். முதலில் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள். பின்னர், இந்திய அரசின் இணையவழி குற்றத்தடுப்பு (Cyber Crime) பிரிவு இணையதளமான https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் உங்கள் புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது உங்கள் மாநிலத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் நேரடியாகவும் புகாரை பதிவு செய்யலாம்.

என்ன செய்யக் கூடாது? மிரட்டல் நபர்கள் குறிப்பிடுவது போன்று மீண்டும் மீண்டும் பணம் அனுப்பக் கூடாது. நண்பர்களுக்கு தெரிந்தால் அவமானம் என எண்ணக்கூடாது. நிதி பிரச்னைகள் யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம். உங்கள் நண்பர்கள் இது போன்ற பிரச்னையில் இருந்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மோசடி செயலிகளை எப்படி கண்டுபிடிப்பது? மோசடியான கடன் செயலிகளைக் கண்டுபிடிக்க புதிய விதிமுறைகளை வகுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே சில சீன கடன் செயலிகளை முடக்கவும் செய்திருக்கிறது. இந்த செயலிகள் பன்னாட்டு நெட்வொர்க்குடன் இயங்குகின்றன. இந்தியாவில் கால் சென்டர் போன்று அமைத்து செயல்படுவதால் மிரட்டல்கள் உள்ளூரிலிருந்தே வருகின்றன. உங்களுக்கு அறிமுகமில்லாத, உடனடியாக கடன் தருகிற அதிக வட்டி டிமாண்ட் செய்கிற எந்த செயலியிலிருந்தும் கடன் பெற வேண்டாம்.

ஆர்பிஐ நடவடிக்கை என்ன? இந்தியாவில் நிதி மோசடிகளை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக, பப்ளிக் டெபாசிட்டரி எனப்படும் கடன் செயலிகள் குறித்த தகவல்கள் அடங்கிய தளத்தை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்திற்கான நிதிக் கொள்கையில் (Bi monthly monetory Policy) "இதனை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி இயக்குநர் சக்தி காந்தா தாஸ், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்" போது அங்கீகாரம் பெற்ற கடன் செயலிகள் எது என்பது குறித்த விளக்கம் மக்களுக்கு கிடைக்கும் என்றார். எனவே, தற்போது வரை சரியான கடன் செயலிகளை கண்டுபிடிக்க வெளிப்படையான நடைமுறை இல்லை. அறிமுகமற்ற செயலிகளை நாடிச் செல்வதைத் தவிர்ப்பதே தற்போதைய நடைமுறைப்படி சிறந்ததாக கருதப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பிரேசிலில் “X” தளம் முடக்கப்பட காரணம் என்ன? அரசியலும், எலான் நடவடிக்கையும்!

சென்னை: இன்றைய ஆன்லைன் யுகத்தில் அனைத்துமே விரல்நுனியில் கிடைக்கின்றன. தீர்வுகள் கிடைப்பது போன்றே பிரச்னைகளும் விரல் நுனியில் தொடங்கி விடுகின்றன. அவசர தேவைகளுக்காக நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியது போக இன்று ஆன்லைனில் கடன் வாங்குபவர்கள் தான் அதிகம். இதில் முறைப்படுத்தப்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் லோன் வாங்கினால் பிரச்னை இல்லை. ஆனால், முறைப்படுத்தப்படாத செயலிகளில் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால் கூட சிக்கல்தான்.

கடன் செயலிகள் எப்படி இயங்குகின்றன? நீங்கள் வங்கிக்கடனுக்காக இணையத்தில் தேடினால், அல்காரிதம் அடிப்படையில் இந்த லோன் தொடர்பான விளம்பரங்கள் உங்களைத் தேடி வரும். சில நேரங்களில் இணையத்தில் நீங்கள் பகிர்ந்து கொண்டதன் அடிப்படையில் உங்கள் மொபைல் எண்ணுக்கே விளம்பரம் வரும். இவ்வாறு வரும் விளம்பரங்களில், அங்கீகாரம் பெற்ற செயலிகளும் இருக்கலாம், அங்கீகாரமற்ற செயலிகளும் இருக்கலாம். ஒரு வேளை நீங்கள் தவறான செயலிகளை தேர்வு செய்தால் என்ன நிகழும் என்பது கற்பனைக்கும் எட்டாதது.

உங்கள் போன் இனி உங்களுடையது இல்லை: இப்படிப்பட்ட செயலிகளை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் போதே பல்வேறு அனுமதிகளைக் கேட்கும். உங்கள் போனில் உள்ள தொலைபேசி எண்களை எடுத்துக் கொள்வது, புகைப்படங்கள் இருக்கும் கேலரிக்கான அனுமதி, எஸ்எம்எஸ் அனுமதி, கால் ரெக்கார்டு அனுமதி போன்றவற்றைக் கேட்கும். இவை எல்லாவற்றையும் கொடுத்துவிட்டால் நீங்கள் கடன் பெறும் போதே உங்கள் போனின் தகவல் முழுவதும் அவர்கள் வசம் சென்றுவிடும்.

இனி மிரட்டல் ஆரம்பம்: உதாரணத்திற்கு நீங்கள் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்குவதாக வைத்துக் கொள்வோம், இதற்கு பிராசசிங் ஃபீஸ் உட்பட பல கட்டணங்களை கழித்துக் கொண்டு ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை உங்கள் அக்கவுண்டிற்கு வரும். அதிகபட்சமாக கடனை திரும்பச் செலுத்த சில நாட்களே அனுமதி கொடுப்பார்கள். இந்நாட்களில் நாள்தோறும் வட்டி ஏறும். ஒரு வாரத்தின் முடிவில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை திரும்பச் செலுத்துமாறு மிரட்டுவார்கள். நீங்கள் ஏற்கனவே பணம் செலுத்தியிருந்தாலும் இதனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மிரட்டல் வரும்.

எந்த எல்லைக்கும் செல்வார்கள்: தொந்தரவு தாளாமல் நீங்கள் பதிலளிக்காமல் இருந்தால், அடுத்த கட்டமாக உங்கள் மொபைல் போனிலிருந்து ஏற்கனவே எடுத்து வைத்துள்ள தொலைபேசி எண்களுக்கு அவதூறான மெசேஜ்களை அனுப்புவார்கள். உங்கள் நண்பர்களுக்கும், அலுவலக அதிகாரிகளுக்கும், உறவினர்களுக்கும் என நூற்றுக்கணக்கில் மெசேஜ்கள் செல்லும். இதனால் பல முனைகளிலிருந்து உங்களுக்கு அழுத்தம் ஏற்படும். இதற்கெல்லாம் உச்சமாக, கேலரியிலிருந்து எடுத்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தும் மிரட்டிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

என்ன செய்ய வேண்டும்? வேறு வழியின்றி இந்த கடன் வலையில் நீங்கள் சிக்கியிருந்தால் பதற்றப்படாதீர்கள். முதலில் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள். பின்னர், இந்திய அரசின் இணையவழி குற்றத்தடுப்பு (Cyber Crime) பிரிவு இணையதளமான https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் உங்கள் புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது உங்கள் மாநிலத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் நேரடியாகவும் புகாரை பதிவு செய்யலாம்.

என்ன செய்யக் கூடாது? மிரட்டல் நபர்கள் குறிப்பிடுவது போன்று மீண்டும் மீண்டும் பணம் அனுப்பக் கூடாது. நண்பர்களுக்கு தெரிந்தால் அவமானம் என எண்ணக்கூடாது. நிதி பிரச்னைகள் யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம். உங்கள் நண்பர்கள் இது போன்ற பிரச்னையில் இருந்தால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மோசடி செயலிகளை எப்படி கண்டுபிடிப்பது? மோசடியான கடன் செயலிகளைக் கண்டுபிடிக்க புதிய விதிமுறைகளை வகுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே சில சீன கடன் செயலிகளை முடக்கவும் செய்திருக்கிறது. இந்த செயலிகள் பன்னாட்டு நெட்வொர்க்குடன் இயங்குகின்றன. இந்தியாவில் கால் சென்டர் போன்று அமைத்து செயல்படுவதால் மிரட்டல்கள் உள்ளூரிலிருந்தே வருகின்றன. உங்களுக்கு அறிமுகமில்லாத, உடனடியாக கடன் தருகிற அதிக வட்டி டிமாண்ட் செய்கிற எந்த செயலியிலிருந்தும் கடன் பெற வேண்டாம்.

ஆர்பிஐ நடவடிக்கை என்ன? இந்தியாவில் நிதி மோசடிகளை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக, பப்ளிக் டெபாசிட்டரி எனப்படும் கடன் செயலிகள் குறித்த தகவல்கள் அடங்கிய தளத்தை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்திற்கான நிதிக் கொள்கையில் (Bi monthly monetory Policy) "இதனை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி இயக்குநர் சக்தி காந்தா தாஸ், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்" போது அங்கீகாரம் பெற்ற கடன் செயலிகள் எது என்பது குறித்த விளக்கம் மக்களுக்கு கிடைக்கும் என்றார். எனவே, தற்போது வரை சரியான கடன் செயலிகளை கண்டுபிடிக்க வெளிப்படையான நடைமுறை இல்லை. அறிமுகமற்ற செயலிகளை நாடிச் செல்வதைத் தவிர்ப்பதே தற்போதைய நடைமுறைப்படி சிறந்ததாக கருதப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பிரேசிலில் “X” தளம் முடக்கப்பட காரணம் என்ன? அரசியலும், எலான் நடவடிக்கையும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.