ETV Bharat / state

வாங்காத கடனுக்கு வட்டியுன் ரூ.3 லட்சம் கட்டச் சொல்லி நோட்டீஸ்.. மகளிர் குழுத் தலைவி மீது பகீர் குற்றச்சாட்டு! - Women Protest In Tirupathur

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 10:47 PM IST

Women Protest In Tirupathur: திருப்பத்தூரில் மகளிர் குழு உறுப்பினர் ஆவணங்களை வைத்து மகளிர் குழு தலைவி பெற்ற கடனுக்கு வட்டியுடன் சேர்த்து பணத்தைக் கட்டுமாறு இரு வங்கிகளில் இருந்து குழு உறுப்பினருக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சியடைந்த பெண் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி பிரியா (23). இவர் அதே பகுதியில் வைரமணி என்பவர் நடத்தி வரும் தெய்வமகள் என்ற மகளிர் குழுவில் உறுப்பினராகச் சேர்ந்து கடன் பெற்று, அதனை தொடர்ந்து திருப்பிச் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் சாலை மறியல் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்தக் குழுவில் 13 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரியா மகளிர் குழுவில் இருந்து விலகியதாக கூறப்படும் நிலையில், அவர் ஏற்கனவே கொடுத்த ஆவணங்களைப் பயன்படுத்தி திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா மற்றும் சின்னகல்லுபள்ளி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட இரண்டு வங்கிகளில் மகளிர் குழு தலைவி வைரமணி பிரியாவுக்கு தெரியாமல் அவரது பெயரில் சுமார் 3 லட்சம் கடன் பெற்று கடனை திருப்பிச் செலுத்தாமல் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் இரண்டு வங்கிகளில் இருந்தும் கடன் தொகை செலுத்துமாறு பிரியாவுக்கு நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்,க் வைரமணியிடம் சென்று வங்கிக் கடன் குறித்து கேட்டுள்ளார். அப்போது வைரமணி சரியான முறையில் பதிலளிக்காமல் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பிரியா ஊர் முக்கியஸ்தர்களிடம் இது குறித்து தெரிவித்து அவர்களை அழைத்துச் சென்று கேட்ட போது, அவர்களையும் வைரமணி உதாசீனப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வங்கியில் வாங்காத கடனுக்கு வட்டியுடன் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேல் கடனைச் செலுத்த வங்கி மூலம் வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பியதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியா, திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் பழனி தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். இதனால் திருப்பத்தூர் - வாணியம்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நிச்சயதார்த்தத்திற்கு பிறகு மறுப்பு.. மருத்துவமனையில் நடைபெற்ற களேபர திருமணம்! - Forced marriage at Hospital

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி பிரியா (23). இவர் அதே பகுதியில் வைரமணி என்பவர் நடத்தி வரும் தெய்வமகள் என்ற மகளிர் குழுவில் உறுப்பினராகச் சேர்ந்து கடன் பெற்று, அதனை தொடர்ந்து திருப்பிச் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் சாலை மறியல் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்தக் குழுவில் 13 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரியா மகளிர் குழுவில் இருந்து விலகியதாக கூறப்படும் நிலையில், அவர் ஏற்கனவே கொடுத்த ஆவணங்களைப் பயன்படுத்தி திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா மற்றும் சின்னகல்லுபள்ளி பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட இரண்டு வங்கிகளில் மகளிர் குழு தலைவி வைரமணி பிரியாவுக்கு தெரியாமல் அவரது பெயரில் சுமார் 3 லட்சம் கடன் பெற்று கடனை திருப்பிச் செலுத்தாமல் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் இரண்டு வங்கிகளில் இருந்தும் கடன் தொகை செலுத்துமாறு பிரியாவுக்கு நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்,க் வைரமணியிடம் சென்று வங்கிக் கடன் குறித்து கேட்டுள்ளார். அப்போது வைரமணி சரியான முறையில் பதிலளிக்காமல் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பிரியா ஊர் முக்கியஸ்தர்களிடம் இது குறித்து தெரிவித்து அவர்களை அழைத்துச் சென்று கேட்ட போது, அவர்களையும் வைரமணி உதாசீனப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வங்கியில் வாங்காத கடனுக்கு வட்டியுடன் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேல் கடனைச் செலுத்த வங்கி மூலம் வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பியதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியா, திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் பழனி தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். இதனால் திருப்பத்தூர் - வாணியம்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நிச்சயதார்த்தத்திற்கு பிறகு மறுப்பு.. மருத்துவமனையில் நடைபெற்ற களேபர திருமணம்! - Forced marriage at Hospital

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.