ETV Bharat / state

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான முறைகேடு வழக்கு 29ஆம் தேதி ஒத்திவைப்பு! - Minister Ponmudi Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 11:36 AM IST

Minister Ponmudi Case: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் முறைகேடு வழக்கு விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி( கோப்புப் படம்)
அமைச்சர் பொன்முடி( கோப்புப் படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006 - 2011-ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த 67 பேரில், ஜூலை 23-ஆம் தேதி வரை 39 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 28 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக சாட்சியமளித்துள்ளனர். புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணைய காவல் ஆய்வாளர் பழனி, விழுப்புரம் மாவட்ட குற்றப் பதிவேடுகள் காவல் துறை தலைமைக் காவலர் ஜெயசெல்வி ஆகிய இருவரும் முறையே 40, 41-ஆவது சாட்சிகளாக விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, வழக்கு தொடர்பாக சாட்சியமளித்தனர்.

இந்த சாட்சியங்களை பதிவு செய்துகொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்

இதையும் படிங்க: ஆயிரம் வீரர்களுடன் நடைபெற்ற மல்லர் கம்பம் சாதனை நிகழ்வு...விழுப்புரத்தில் அசத்தல்!

விழுப்புரம்: வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006 - 2011-ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த 67 பேரில், ஜூலை 23-ஆம் தேதி வரை 39 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 28 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக சாட்சியமளித்துள்ளனர். புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணைய காவல் ஆய்வாளர் பழனி, விழுப்புரம் மாவட்ட குற்றப் பதிவேடுகள் காவல் துறை தலைமைக் காவலர் ஜெயசெல்வி ஆகிய இருவரும் முறையே 40, 41-ஆவது சாட்சிகளாக விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, வழக்கு தொடர்பாக சாட்சியமளித்தனர்.

இந்த சாட்சியங்களை பதிவு செய்துகொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்

இதையும் படிங்க: ஆயிரம் வீரர்களுடன் நடைபெற்ற மல்லர் கம்பம் சாதனை நிகழ்வு...விழுப்புரத்தில் அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.