தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில், புதிய பேருந்து நிறுத்தம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் பணியின் துவக்கமாகப் பேருந்து நிலைய அஸ்திவாரம் அமைப்பதற்கான காட்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக அனைத்து கட்டடங்களுக்கும் அஸ்திவார தூண்கள் அமைப்பதற்கு முறைப்படி கான்கிரீட் பாக்ஸ் என அழைக்கப்படும் இரும்புப் பெட்டி அல்லது மரச் சட்டத்தை வைத்து அடைத்து அதன் உள்ளே கான்கிரீட் கலவைகளைக் கொட்டி கான்கிரீட் தூண்கள் போடுவது தான் வழக்கம். ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்மாறாக, சொக்கலிங்கபுரம் கிராமத்தில் அமைக்கப்பட இருக்கும் புதிய பேருந்து நிறுத்ததின் அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணியில் கான்கிரீட் பாக்ஸ் அல்லது மரச் சட்டத்தை வைத்து கான்கிரீட் தூண் அமைக்காமல், செங்கல்லை ஒன்றன் மீது ஒன்று ஒழுங்கற்ற முறையில் அடுக்கி வைத்து அதன் உள்ளே இரும்பு கம்பியைப் பெயருக்குப் பொருத்தி கான்கிரீட் அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.