ETV Bharat / state

சந்தேகத்தால் காதல் மனைவியை கொலை செய்த கணவன்! பிள்ளைகளின் நிலை என்ன? - Vellore husband kill wife

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கணவன் சந்தேகப்பட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த சசிகலா , கணவர் தியாகராஜன்
உயிரிழந்த சசிகலா , கணவர் தியாகராஜன் (Credits- ETV Bharat Tamil Nadu)

வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த மூடினாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (44). இவர் வேலூர் அடுத்த சேன்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சசிகலாவும் (34) பத்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளன. இருவரும் தனியார் காலனி தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட நாள் முதல் தியாகராஜன் மனைவி சசிகலா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மாமனார், மாமியார், குழந்தைகள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சசிகலா வீட்டில் தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை சுமார் 4 மணி அளவில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு வீட்டிற்குள்ளேயே அங்கேயும், இங்கேயும் வேகமாக நடந்து கொண்டு இருந்துள்ளார்.

இதனைக் கண்ட தியாகராஜனின் தாய் ஜெயஸ்ரீ எதற்காக இந்த நேரத்தில் இவ்வளவு வேகமாக நடந்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் காலை 6 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே வந்து பக்கத்தில் இருந்த உறவினரிடம் நான் எனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டேன் என்று சொல்லி உள்ளார் தியாகராஜன். இதில் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டு உறவினர்கள் தியாகராஜனின் வீட்டிற்கு வந்து தியாகராஜனின் தாய் மற்றும் தந்தையை எழுப்பி தியாகராஜன் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த மாமனார் மற்றும் மாமியார் சசிகலா உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது சசிகலா ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக தியாகராஜனின் உறவினர்கள் கே.வி குப்பம் காவல்துறையினருக்கும், சசிகலாவின் உறவினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 10 நாட்களுக்கு முன்பு திருமணம்.. வழிப்பறியில் சிக்கிய புது மாப்பிள்ளை!

தகவல் அறிந்த சசிகலாவின் உறவினர்கள் தியாகராஜனின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சசிகலா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கூச்சலிட்டு தியாகராஜனை பிடித்து கே.வி குப்பம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கே.வி குப்பம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடந்து தியாகராஜனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக தியாகராஜனின் பெற்றோர் கூறுகையில் மனைவி மீது தியாகராஜனுக்கு சந்தேகம் இருப்பதாகவும் இதனால் பலமுறை அவரிடம் பிரச்சனை செய்ததாகவும் மருமகள் தான் வேலை செய்து கொண்டே எங்களையும் பார்த்துக் கொள்வதாகவும் கூறினர்.

மேலும் மகன் தியாகராஜன் இது போன்ற ஒரு செயலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர். மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டத்தின் பேரில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த மூடினாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (44). இவர் வேலூர் அடுத்த சேன்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சசிகலாவும் (34) பத்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளன. இருவரும் தனியார் காலனி தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட நாள் முதல் தியாகராஜன் மனைவி சசிகலா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மாமனார், மாமியார், குழந்தைகள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சசிகலா வீட்டில் தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை சுமார் 4 மணி அளவில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு வீட்டிற்குள்ளேயே அங்கேயும், இங்கேயும் வேகமாக நடந்து கொண்டு இருந்துள்ளார்.

இதனைக் கண்ட தியாகராஜனின் தாய் ஜெயஸ்ரீ எதற்காக இந்த நேரத்தில் இவ்வளவு வேகமாக நடந்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் காலை 6 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே வந்து பக்கத்தில் இருந்த உறவினரிடம் நான் எனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டேன் என்று சொல்லி உள்ளார் தியாகராஜன். இதில் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டு உறவினர்கள் தியாகராஜனின் வீட்டிற்கு வந்து தியாகராஜனின் தாய் மற்றும் தந்தையை எழுப்பி தியாகராஜன் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த மாமனார் மற்றும் மாமியார் சசிகலா உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது சசிகலா ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக தியாகராஜனின் உறவினர்கள் கே.வி குப்பம் காவல்துறையினருக்கும், சசிகலாவின் உறவினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 10 நாட்களுக்கு முன்பு திருமணம்.. வழிப்பறியில் சிக்கிய புது மாப்பிள்ளை!

தகவல் அறிந்த சசிகலாவின் உறவினர்கள் தியாகராஜனின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சசிகலா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு கூச்சலிட்டு தியாகராஜனை பிடித்து கே.வி குப்பம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கே.வி குப்பம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடந்து தியாகராஜனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக தியாகராஜனின் பெற்றோர் கூறுகையில் மனைவி மீது தியாகராஜனுக்கு சந்தேகம் இருப்பதாகவும் இதனால் பலமுறை அவரிடம் பிரச்சனை செய்ததாகவும் மருமகள் தான் வேலை செய்து கொண்டே எங்களையும் பார்த்துக் கொள்வதாகவும் கூறினர்.

மேலும் மகன் தியாகராஜன் இது போன்ற ஒரு செயலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர். மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டத்தின் பேரில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.