ETV Bharat / state

நாளை தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம்; தமிழக அரசு தடை விதிக்க கோரி போராட்டம்! - Dharumapuram adheenam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 10:11 PM IST

Updated : May 29, 2024, 10:42 PM IST

Dharumai adheenam pattana pravesam: நாளை நடைபெற உள்ள தருமபுர ஆதினத்தின் பட்டணப் பிரவேசத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டி, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டணப் பிரவேசத்தை கண்டித்து போராட்டம்
பட்டணப் பிரவேசத்தை கண்டித்து போராட்டம் (Photo credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் உள்ள தருமபுர ஆதீன மடத்தில், குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வைகாசி மாத பெருவிழா கடந்த மே 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விசிக மாவட்டச் செயலாளர் மோகன்குமார் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பெருவிழாவின் 10ஆம் நாளான இன்று (புதன்கிழமை), ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, ஆதினம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு பக்தர்கள் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சுமந்து சென்றனர்.

அங்கு யானைகளைக் கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டு, பின்னர் வழிபாடு நடத்தினர். ஞானபிரகாசர் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் சுமந்து, ஆதீனத்தின் நான்கு வீதிகளைச் சுற்றி வலம் வரும் பட்டணப்பிரவேசம் நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நிகல்வு, நாளை (வியாழக்கிழமை) இரவு 9 மணி அளவிலும், மறுநாள் அதிகாலையில் ஞான கொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, தருமபுரத்தில் நடக்கும் பட்டணப்பிரவேச நிகழ்விற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், நாளை நடைபெற உள்ள பட்டணப் பிரவேச விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஒன்று கூடி, மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்குமார் கூறுகையில், “மனிதனை மனிதனே சுமக்கக் கூடாது என்ற சட்டம் அமலில் இருக்கும் போதே, மரபு என்ற பெயரில் பல்லக்கில் பவனி வரும் பட்டணப் பிரவேசத்தை தருமபுரம் ஆதினம் தொடர்ந்து செய்து வருகிறார்.

இது முற்றிலும் சட்டத்திற்கு எதிரான செயல். எனவே, இவர் மக்களுக்கு விரோதமாக செயல்படும் இந்த பட்டணப் பிரவேசத்தை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இந்த விழாவிற்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: நாளை மோடி குமரி பயணம்; திமுக, காங்கிரஸ், சிபிஐ(எம்) எதிர்ப்பு!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் உள்ள தருமபுர ஆதீன மடத்தில், குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வைகாசி மாத பெருவிழா கடந்த மே 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விசிக மாவட்டச் செயலாளர் மோகன்குமார் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பெருவிழாவின் 10ஆம் நாளான இன்று (புதன்கிழமை), ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, ஆதினம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு பக்தர்கள் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சுமந்து சென்றனர்.

அங்கு யானைகளைக் கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டு, பின்னர் வழிபாடு நடத்தினர். ஞானபிரகாசர் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் சுமந்து, ஆதீனத்தின் நான்கு வீதிகளைச் சுற்றி வலம் வரும் பட்டணப்பிரவேசம் நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நிகல்வு, நாளை (வியாழக்கிழமை) இரவு 9 மணி அளவிலும், மறுநாள் அதிகாலையில் ஞான கொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, தருமபுரத்தில் நடக்கும் பட்டணப்பிரவேச நிகழ்விற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், நாளை நடைபெற உள்ள பட்டணப் பிரவேச விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஒன்று கூடி, மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன்குமார் கூறுகையில், “மனிதனை மனிதனே சுமக்கக் கூடாது என்ற சட்டம் அமலில் இருக்கும் போதே, மரபு என்ற பெயரில் பல்லக்கில் பவனி வரும் பட்டணப் பிரவேசத்தை தருமபுரம் ஆதினம் தொடர்ந்து செய்து வருகிறார்.

இது முற்றிலும் சட்டத்திற்கு எதிரான செயல். எனவே, இவர் மக்களுக்கு விரோதமாக செயல்படும் இந்த பட்டணப் பிரவேசத்தை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இந்த விழாவிற்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: நாளை மோடி குமரி பயணம்; திமுக, காங்கிரஸ், சிபிஐ(எம்) எதிர்ப்பு!

Last Updated : May 29, 2024, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.