ETV Bharat / state

“ஸ்டாலினின் ஞாபக மறதி தமிழகத்துக்கு நல்லதல்ல”.. வானதி சீனிவாசன் திட்டவட்டம்! - Vanathi Srinivasan alleged

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 16 hours ago

Updated : 15 hours ago

மாநிலத்தின் முதலமைச்சருக்கு இவ்வளவு குறைவான ஆண்டுகளில் மறதி வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை, செந்தில் பாலாஜியின் ஊரிலேயே மு.க.ஸ்டாலின் தனது வாயாலேயே பேசிய ஊழல் குற்றச்சாட்டுகளை அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன். (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது வாயாலேயே சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளை மறந்துவிட்டார். இந்த மறதி தமிழகத்துக்கு நல்லதல்ல என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த வழக்கை நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசில் அமைச்சராக இருந்தபோது பணம் வாங்கிக்கொண்டு வேலை அளித்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.

ஆயிரக்கணக்கான நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய விஷயம் இது. அரசு அதிகாரத்தில் முக்கியமான நபராக செந்தில் பாலாஜி இருந்ததால், சாட்சிகள் பயப்படுவார்கள் என்பதால் தான் அவருக்கு ஜாமீன் கொடுக்காமல் இவ்வளவு நாட்களாக உள்ளே வைத்து இருந்தார்கள். இப்போது உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

திமுக அரசு குற்றம் சாட்டப்பட்ட நபர்களை ஒருபோதும் நியாயமான விசாரணைக்கு அனுமதித்ததில்லை. திமுக அரசு இந்த வழக்கை அதிகாரத்தைஅப் பயன்படுத்தி நீர்த்து போக வைக்காமல், வழக்கு தொடுத்தவர்ளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

செந்தில் பாலாஜி மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்பதை தற்போதைய முதல்வரே பேசி இருக்கின்றார். தற்போது செந்தில் பாலாஜி கட்சி மாறி இருப்பதால் அவர் மறந்திருக்கலாம். மாநிலத்தின் முதலமைச்சர். அவருக்கு இவ்வளவு குறைவான வருஷத்தில் மறதி வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. செந்தில் பாலாஜியின் ஊரிலேயே மு.க.ஸ்டாலின் தனது வாயாலேயே பேசிய ஊழல் குற்றச்சாட்டுகளை அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். முதல்வருக்கு இவ்வளவு சீக்கிரம் மறதி வருவது தமிழகத்துக்கு நல்லதல்ல.

இதையும் படிங்க: படுத்த படுக்கையான மனைவி.. வேறு வழியில்லாமல் கணவர் எடுத்த முடிவு.. கலங்க வைக்கும் குமரி சம்பவம்!

மத்திய அரசைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக எந்த அமைச்சர் மீதும் குற்றச்சாட்டுகள் இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்பொழுதும் தமிழக அமைச்சர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்பதையும் மக்கள் முன்பு நியாபகப்படுத்துகிறோம்" என்றார்.

முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பிரதமரைச் சந்திக்க உள்ள நேரத்தில் ஜாமீன் கிடைத்திருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "இந்த மாதிரி கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்றார்.

சவுக்கு சங்கர் சிறையிலிருந்து விடுதலையாகி உள்ளது குறித்த கேள்விக்கு, "சமூக ஊடகத்தில் சிறு கருத்துகள் போடுவதற்கு கூட இந்த அரசு அதீத நடவடிக்கை எடுத்திருக்கிறது. அரசாங்கத்துக்கு அவர்கள் மீதே நம்பிக்கை இல்லை. சவுக்கு சங்கர் ஒரு காலத்தில் திமுக அரசுக்கு ஆதரவாக இருந்தவர். இன்று அவர் அரசை விமர்சித்தவுடன் குண்டர் சட்டம் போட்டு விடுகின்றனர். எந்த அளவுக்கு இந்த அரசு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறது என்பதைப் பார்க்கிறோம்.

செந்தில் பாலாஜி அரசின் முழு ஆதரவைப் பெற்ற, பவர்ஃபுல் அமைச்சராக இருந்தவர். அவர் உள்ளே இருந்தாலும் கூட கோவை மாநகராட்சியில் யார் மேயராக வேண்டும் என்பதை முடிவு செய்தார் என கூறப்படுகிறது. மீண்டும் அதே போன்ற ஒரு முக்கியத்துவமோ, அதே செல்வாக்கு இருந்தால் அது சாட்சிகளைப் பாதிக்கும். மாநில முதல்வர் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஊழலுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என முதல்வர் சொல்வதை செயலில் காட்ட வேண்டும். செந்தில் பாலாஜி ஜாமீனில் வந்தாலும் அவர் நிபந்தனைகளை மீறுகிறாரா என்பதை அமலாக்கத் துறை கண்காணிக்க வேண்டும்" என்றார்.

கோயம்புத்தூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது வாயாலேயே சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளை மறந்துவிட்டார். இந்த மறதி தமிழகத்துக்கு நல்லதல்ல என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த வழக்கை நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசில் அமைச்சராக இருந்தபோது பணம் வாங்கிக்கொண்டு வேலை அளித்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.

ஆயிரக்கணக்கான நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய விஷயம் இது. அரசு அதிகாரத்தில் முக்கியமான நபராக செந்தில் பாலாஜி இருந்ததால், சாட்சிகள் பயப்படுவார்கள் என்பதால் தான் அவருக்கு ஜாமீன் கொடுக்காமல் இவ்வளவு நாட்களாக உள்ளே வைத்து இருந்தார்கள். இப்போது உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

திமுக அரசு குற்றம் சாட்டப்பட்ட நபர்களை ஒருபோதும் நியாயமான விசாரணைக்கு அனுமதித்ததில்லை. திமுக அரசு இந்த வழக்கை அதிகாரத்தைஅப் பயன்படுத்தி நீர்த்து போக வைக்காமல், வழக்கு தொடுத்தவர்ளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

செந்தில் பாலாஜி மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்பதை தற்போதைய முதல்வரே பேசி இருக்கின்றார். தற்போது செந்தில் பாலாஜி கட்சி மாறி இருப்பதால் அவர் மறந்திருக்கலாம். மாநிலத்தின் முதலமைச்சர். அவருக்கு இவ்வளவு குறைவான வருஷத்தில் மறதி வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. செந்தில் பாலாஜியின் ஊரிலேயே மு.க.ஸ்டாலின் தனது வாயாலேயே பேசிய ஊழல் குற்றச்சாட்டுகளை அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். முதல்வருக்கு இவ்வளவு சீக்கிரம் மறதி வருவது தமிழகத்துக்கு நல்லதல்ல.

இதையும் படிங்க: படுத்த படுக்கையான மனைவி.. வேறு வழியில்லாமல் கணவர் எடுத்த முடிவு.. கலங்க வைக்கும் குமரி சம்பவம்!

மத்திய அரசைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக எந்த அமைச்சர் மீதும் குற்றச்சாட்டுகள் இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்பொழுதும் தமிழக அமைச்சர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்பதையும் மக்கள் முன்பு நியாபகப்படுத்துகிறோம்" என்றார்.

முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பிரதமரைச் சந்திக்க உள்ள நேரத்தில் ஜாமீன் கிடைத்திருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "இந்த மாதிரி கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்றார்.

சவுக்கு சங்கர் சிறையிலிருந்து விடுதலையாகி உள்ளது குறித்த கேள்விக்கு, "சமூக ஊடகத்தில் சிறு கருத்துகள் போடுவதற்கு கூட இந்த அரசு அதீத நடவடிக்கை எடுத்திருக்கிறது. அரசாங்கத்துக்கு அவர்கள் மீதே நம்பிக்கை இல்லை. சவுக்கு சங்கர் ஒரு காலத்தில் திமுக அரசுக்கு ஆதரவாக இருந்தவர். இன்று அவர் அரசை விமர்சித்தவுடன் குண்டர் சட்டம் போட்டு விடுகின்றனர். எந்த அளவுக்கு இந்த அரசு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறது என்பதைப் பார்க்கிறோம்.

செந்தில் பாலாஜி அரசின் முழு ஆதரவைப் பெற்ற, பவர்ஃபுல் அமைச்சராக இருந்தவர். அவர் உள்ளே இருந்தாலும் கூட கோவை மாநகராட்சியில் யார் மேயராக வேண்டும் என்பதை முடிவு செய்தார் என கூறப்படுகிறது. மீண்டும் அதே போன்ற ஒரு முக்கியத்துவமோ, அதே செல்வாக்கு இருந்தால் அது சாட்சிகளைப் பாதிக்கும். மாநில முதல்வர் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஊழலுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என முதல்வர் சொல்வதை செயலில் காட்ட வேண்டும். செந்தில் பாலாஜி ஜாமீனில் வந்தாலும் அவர் நிபந்தனைகளை மீறுகிறாரா என்பதை அமலாக்கத் துறை கண்காணிக்க வேண்டும்" என்றார்.

Last Updated : 15 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.