ETV Bharat / state

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில்; இந்த ஊர்களில் எல்லாம் நிற்கும்! - trichy tambaram spl train

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 9:58 AM IST

ரயில் பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ரயில் -கோப்புப்படம்
ரயில் -கோப்புப்படம் (Image Credit - ETV Bharat Tamilnadu)

திருச்சி: ரயில் பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் ( எண் : 06166) இன்று (ஜுலை 28) இயக்கப்படுகிறது.

திருச்சியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் திண்டிவனம் வழியாக நாளை காலை ( ஜுலை 29) 6:05 மணிக்கு தாம்பரம் சென்றடையும்' என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து பவ்வேறு வெளிமாவட்டங்களுக்கும், வார விடுமுறை முடிந்து ஞாயிறு இரவு வெளிமாவட்டங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை பொதுவாக அதிகமாக இருப்பதால், கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அவ்வப்போது இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரயிலில் இருந்து இறங்கும் போது விபரீதம்.. கால்கள் துண்டான நிலையில் இளைஞர் மீட்பு.. நெல்லையில் சோகம்!

திருச்சி: ரயில் பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ரயில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் ( எண் : 06166) இன்று (ஜுலை 28) இயக்கப்படுகிறது.

திருச்சியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் திண்டிவனம் வழியாக நாளை காலை ( ஜுலை 29) 6:05 மணிக்கு தாம்பரம் சென்றடையும்' என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து பவ்வேறு வெளிமாவட்டங்களுக்கும், வார விடுமுறை முடிந்து ஞாயிறு இரவு வெளிமாவட்டங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை பொதுவாக அதிகமாக இருப்பதால், கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அவ்வப்போது இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரயிலில் இருந்து இறங்கும் போது விபரீதம்.. கால்கள் துண்டான நிலையில் இளைஞர் மீட்பு.. நெல்லையில் சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.