ETV Bharat / state

நீலகிரியில் மின்சாரம் தாக்கி பணியில் இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் பலி - TNSTC Bus driver dead

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 1:38 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மின்சாரம் தாக்கியதில் பணியில் இருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த பேருந்து ஓட்டுநர் பிரதாப்
உயிரிழந்த பேருந்து ஓட்டுநர் பிரதாப் (Credit - ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: கீழ் கோத்தகிரி துனேறி பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப்(47), இவர் கோத்தகிரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், கோத்தகிரியிலிருந்து கூட்டடா செல்லும் பேருந்தை இயக்கி வருகிறார்.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6:30 மணி அளவில் கூட்டடாவில் இருந்து பயணிகளுடன் கோத்தகிரி நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது கோவில் மட்டம் பகுதியில் சாலையின் நடுவில் மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது.

ஓட்டுநர் பிரதாப் மின் கம்பியில் உரசாமல் பேருந்தை இயக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பிரதாப் பேருந்தின் உள்ளே சுருண்டு விழுந்தார். பின்னர், பேருந்திலிருந்த பயணிகள் அவசர கதவு மற்றும் பின்வழியாக கீழே இறங்கி உயிர் தப்பினர்.

சம்பவம் குறித்து அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற கோத்தகிரி காவல் நிலைய போலீசார், மின்சார வாரிய ஊழியர்கள் உதவியுடன் மின் இணைப்பைத் துண்டித்து ஓட்டுநர் பிரதாப்பை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினார்.

பின்னர் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆளில்லாத வீடுகள் தான் டார்கெட்.. வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பெண்கள்.. சத்தியமங்கலம் பகீர் சம்பவம்!

நீலகிரி: கீழ் கோத்தகிரி துனேறி பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப்(47), இவர் கோத்தகிரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், கோத்தகிரியிலிருந்து கூட்டடா செல்லும் பேருந்தை இயக்கி வருகிறார்.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6:30 மணி அளவில் கூட்டடாவில் இருந்து பயணிகளுடன் கோத்தகிரி நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது கோவில் மட்டம் பகுதியில் சாலையின் நடுவில் மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது.

ஓட்டுநர் பிரதாப் மின் கம்பியில் உரசாமல் பேருந்தை இயக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பிரதாப் பேருந்தின் உள்ளே சுருண்டு விழுந்தார். பின்னர், பேருந்திலிருந்த பயணிகள் அவசர கதவு மற்றும் பின்வழியாக கீழே இறங்கி உயிர் தப்பினர்.

சம்பவம் குறித்து அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற கோத்தகிரி காவல் நிலைய போலீசார், மின்சார வாரிய ஊழியர்கள் உதவியுடன் மின் இணைப்பைத் துண்டித்து ஓட்டுநர் பிரதாப்பை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினார்.

பின்னர் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆளில்லாத வீடுகள் தான் டார்கெட்.. வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பெண்கள்.. சத்தியமங்கலம் பகீர் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.