ETV Bharat / state

குழந்தை பாலினம் விவகாரம்; இர்பானின் விளக்கம் ஏற்பு - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்! - Irfan gender reveal issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 9:15 PM IST

Irfan issue: யூடியூபர் இர்பானின் விளக்கம் திருப்தி அளிப்பதாக தமிழ்நாடு மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல், வெளிநாட்டில் பரிசோதனை மேற்கொண்டுள்ளதால் இதுபோன்ற பிரச்னைகளை வருங்காலத்தில் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிடம் பேசி பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்தல் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Irfan
இர்பான் (Credits: Youtuber Irfan Instagram page)

சென்னை: பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்தது தொடர்பாக மருத்துவத் துறையிடம் நீண்ட விளக்கம் மற்றும் விழிப்புணர்வு காணொளி வெளியிடுவதாக தெரிவித்த நிலையில், அவரது பதில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவத் துறையின் முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, யூடியூபர் இர்பான், அவரது மனைவியுடன் இணைந்து சில நாட்களுக்கு முன் துபாய் சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்தபின், அதனை தன் யூடியூப் சேனல் உள்பட சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டார்.

பின்னர், இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து இர்பானிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு சுகாதாரத்துறை நோட்டீஸும் அனுப்பியது. மேலும், காவல்துறையிலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த மே 22ஆம் தேதி இர்பான் சென்னை, டிஎம்எஸ் வளாகத்திற்கு நேரில் வந்து தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் ஒன்றை கொடுத்தார்.

மேலும், தனது யூடியூப் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து, விளக்கி மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாகவும் அதிகாரிகளிடம் தெரிவிதிருந்தார். இதையடுத்து, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக அப்போது தகவல் வெளியானது.

மேலும், இர்பான் வழங்கிய கடிதத்தில், "இதுபோன்ற விதிமுறை உள்ளது என எனக்கு தெரியாது. இந்தியாவில் பாலினம் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே தான் எண்ணினேன். இப்படி ஒரு விதிமுறை இருப்பது என்பது தெரியாமல் தான் வீடியோ வெளியிட்டேன்" என கூறப்பட்டிருந்தது.

அது மட்டுமல்லாமல், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, “இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. யூடியூபர் இர்பானின் இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது.

எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர், (PCPNDT ACT 1994) மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் இர்பானுக்கு மே.21 ம் தேதி பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பானை சார்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், இர்பானால் பதிவிடப்பட்ட அந்த வீடியோவை உடனடியாக நீக்கிட வலையொளி தளத்திற்கும், கணிணி குற்றம் (Cyber Crime) பிரிவிற்கும் மே.21 ம் தேதி கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருவின் பாலினம் அறிவதும், அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என குறிப்பாணையையும் இர்பானுக்கு அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்.. சுகாதாரத் துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

சென்னை: பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்தது தொடர்பாக மருத்துவத் துறையிடம் நீண்ட விளக்கம் மற்றும் விழிப்புணர்வு காணொளி வெளியிடுவதாக தெரிவித்த நிலையில், அவரது பதில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவத் துறையின் முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, யூடியூபர் இர்பான், அவரது மனைவியுடன் இணைந்து சில நாட்களுக்கு முன் துபாய் சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்தபின், அதனை தன் யூடியூப் சேனல் உள்பட சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டார்.

பின்னர், இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து இர்பானிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு சுகாதாரத்துறை நோட்டீஸும் அனுப்பியது. மேலும், காவல்துறையிலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த மே 22ஆம் தேதி இர்பான் சென்னை, டிஎம்எஸ் வளாகத்திற்கு நேரில் வந்து தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் ஒன்றை கொடுத்தார்.

மேலும், தனது யூடியூப் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து, விளக்கி மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாகவும் அதிகாரிகளிடம் தெரிவிதிருந்தார். இதையடுத்து, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக அப்போது தகவல் வெளியானது.

மேலும், இர்பான் வழங்கிய கடிதத்தில், "இதுபோன்ற விதிமுறை உள்ளது என எனக்கு தெரியாது. இந்தியாவில் பாலினம் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே தான் எண்ணினேன். இப்படி ஒரு விதிமுறை இருப்பது என்பது தெரியாமல் தான் வீடியோ வெளியிட்டேன்" என கூறப்பட்டிருந்தது.

அது மட்டுமல்லாமல், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, “இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. யூடியூபர் இர்பானின் இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது.

எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர், (PCPNDT ACT 1994) மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் இர்பானுக்கு மே.21 ம் தேதி பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பானை சார்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், இர்பானால் பதிவிடப்பட்ட அந்த வீடியோவை உடனடியாக நீக்கிட வலையொளி தளத்திற்கும், கணிணி குற்றம் (Cyber Crime) பிரிவிற்கும் மே.21 ம் தேதி கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருவின் பாலினம் அறிவதும், அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என குறிப்பாணையையும் இர்பானுக்கு அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்.. சுகாதாரத் துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.