ETV Bharat / state

"கச்சத்தீவை சும்மா கொடுக்க வில்லை" : காங்கிரஸ் கட்சியின் புதிய விளக்கம்! - Congress Spokesperson about bjp

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 6:28 PM IST

Congress explanation on Katchatheevu issue: இந்திய அரசு கச்சத்தீவை சும்மா ஒன்றும் இலங்கைக்கு கொடுக்கவில்லை, அதற்கு பதில் “வேட்ஜ் பேங்” பகுதியை எடுத்துக் கொண்டது, தற்போது தேர்தல் நேரத்தில் பாஜக நாடகம் நடத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் செந்தில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் புதிய விளக்கம்
கச்சத்தீவுக்கு பதிலாக மன்னார் வளைகுடாவில் இலங்கைக்கு சொந்தமான கடல் நிலத்தை பெற்றோம்
கச்சத்தீவுக்கு பதிலாக மன்னார் வளைகுடாவில் இலங்கைக்கு சொந்தமான கடல் நிலத்தை பெற்றோம்

சேலம்: தமிழ்நாடு அளவில் கச்சத்தீவு விவகாரம் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், கச்சத்தீவுக்கு மாற்றாக மன்னார் வளைகுடா பகுதியில் பல லட்சம் ஏக்கர் கடல் நிலப்பரப்பை இந்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது, எனவும், அதை பயன்படுத்தி பல லட்சம் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் செந்தில் இன்று (ஏப்.02) விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களை சென்ற மார்ச்.31 ம் தேதி வெளியிட்டார். அதில், 1974 ல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ், ஆட்சியில் இருந்த போது, கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது எனவும், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (ஏப்.01) கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கச்சத்தீவை தங்களுக்கு வழங்க வேண்டும் என 1948 முதல் இலங்கை அரசு இந்தியாவிற்கு கோரிக்கை வைத்தது. இதனையடுத்து 1974 ல் இந்திரா காந்தி தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கி ஒப்பந்தம் போடப்பட்டது. கச்சத்தீவு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்டது.

கருணாநிதி அப்போது நான் பெயருக்கும், அரசியல் ஆதாயத்திற்கும், கச்சத்தீவு தொடர்பாகப் பெரிய போராட்டம் எதுவும் நடக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி கச்சத்தீவை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் அப்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தால் கச்சத்தீவு தற்போது இலங்கை வசம் இருந்திருக்காது", என்று தெரிவித்திருந்தார்.

மேலும் கட்சி தீவை மீட்பது பாரதிய ஜனதாவின் குறிக்கோள் எனவும் அவர் உறுதிபட கூறி இருந்தார். இந்த நிலையில் சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் டாக்டர் பி.வி.செந்தில், இன்று (ஏப்.02) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கச்சத்தீவு 285 ஏக்கர் கொண்ட மணல் திட்டு, ஒரு சொட்டு தண்ணீர் கூட அங்கு குடிக்க கிடைக்காது. 1901 ம் ஆண்டில் இருந்து பிரிட்டிஷ் அரசுதான் அந்த தீவை நிர்வாகம் செய்து வந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இந்திய, இலங்கை மீனவர்கள் அதை பயன்படுத்தி வந்தனர். மீன் வலைகளை காய வைப்பதற்காகவும், அங்குள்ள தேவாலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை விழா நடத்துவதற்காகவும் கச்சத்தீவு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 1974 ம் ஆண்டு அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லையை வரையறுக்க முற்பட்டார்.

அதாவது வங்களா விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியை வரையறை செய்ய வேண்டும் என்று ஒரு திட்டத்தை முன்னெடுத்தார். அப்போதுதான் இலங்கை அரசு கச்சத்தீவு விவகாரத்தை முன் வைத்தது. இதையடுத்து இரு நாடுகளும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டன.

சும்மா ஒன்றும் இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கவில்லை. ஒன்றைக் கொடுத்து ஒன்றை பெறுவது தான் உடன்படிக்கை. அதன்படி 1974 ம் ஆண்டில் இந்திய நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக மக்களுக்கும், மீனவர்களுக்கும் எது பலனளிக்கும் என்ற தொலைநோக்கில் கச்சத்தீவானது இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.

அதற்கு மாறாக 1976 ம் ஆண்டு மார்ச் 23 ம் தேதி, மன்னார் வளைகுடா - வங்காள விரிகுடா கடல் எல்லை வரையறை செய்யப்பட்டு, “வேட்ஜ் பேங்” என்ற பகுதியை இந்தியா எடுத்துக் கொண்டது. கிட்டத்தட்ட 10 ஆயிரம் சதுர கிமீ கொண்ட கன்னியாகுமரியின் தெற்கே கடல் பகுதி இந்திய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது. அது இன்று 25 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட கடல் பகுதியாக உள்ளது.

வெறும் 285 ஏக்கர் நிலத்தை கொடுத்துவிட்டு, பத்தாயிரம் சதுர கிமீ கொண்ட 25 லட்சம் ஏக்கரை கடலில் இந்தியா எடுத்துள்ளது. இதுதான் அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை. அந்த கடல் நில பரப்பில் 60க்கும் மேற்பட்ட அரிய வகை மீன் இனங்கள் உள்ளன. அந்த பகுதியை பயன்படுத்தித் தான் கன்னியாகுமரி, குளச்சல் மற்றும் கேரள மாநில மீனவர்கள் பல லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் நீடித்த நிலையான முடிவை கொச்சைப்படுத்தும் வகையில் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் பேசி வருகின்றனர். அவர்களது பேச்சில் உண்மை இல்லை, தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி நாடகம் நடத்துகிறது. அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்திரா காந்தி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது தான் உண்மை”, என விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக Vs பாஜக என மாறுகிறதா தேர்தல் களம்? - உண்மை நிலவரம் என்ன? - DMK VS BJP

கச்சத்தீவுக்கு பதிலாக மன்னார் வளைகுடாவில் இலங்கைக்கு சொந்தமான கடல் நிலத்தை பெற்றோம்

சேலம்: தமிழ்நாடு அளவில் கச்சத்தீவு விவகாரம் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், கச்சத்தீவுக்கு மாற்றாக மன்னார் வளைகுடா பகுதியில் பல லட்சம் ஏக்கர் கடல் நிலப்பரப்பை இந்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது, எனவும், அதை பயன்படுத்தி பல லட்சம் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் செந்தில் இன்று (ஏப்.02) விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களை சென்ற மார்ச்.31 ம் தேதி வெளியிட்டார். அதில், 1974 ல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ், ஆட்சியில் இருந்த போது, கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது எனவும், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (ஏப்.01) கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கச்சத்தீவை தங்களுக்கு வழங்க வேண்டும் என 1948 முதல் இலங்கை அரசு இந்தியாவிற்கு கோரிக்கை வைத்தது. இதனையடுத்து 1974 ல் இந்திரா காந்தி தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கி ஒப்பந்தம் போடப்பட்டது. கச்சத்தீவு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சம்மதத்துடன் இலங்கைக்கு வழங்கப்பட்டது.

கருணாநிதி அப்போது நான் பெயருக்கும், அரசியல் ஆதாயத்திற்கும், கச்சத்தீவு தொடர்பாகப் பெரிய போராட்டம் எதுவும் நடக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி கச்சத்தீவை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் அப்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தால் கச்சத்தீவு தற்போது இலங்கை வசம் இருந்திருக்காது", என்று தெரிவித்திருந்தார்.

மேலும் கட்சி தீவை மீட்பது பாரதிய ஜனதாவின் குறிக்கோள் எனவும் அவர் உறுதிபட கூறி இருந்தார். இந்த நிலையில் சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் டாக்டர் பி.வி.செந்தில், இன்று (ஏப்.02) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கச்சத்தீவு 285 ஏக்கர் கொண்ட மணல் திட்டு, ஒரு சொட்டு தண்ணீர் கூட அங்கு குடிக்க கிடைக்காது. 1901 ம் ஆண்டில் இருந்து பிரிட்டிஷ் அரசுதான் அந்த தீவை நிர்வாகம் செய்து வந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இந்திய, இலங்கை மீனவர்கள் அதை பயன்படுத்தி வந்தனர். மீன் வலைகளை காய வைப்பதற்காகவும், அங்குள்ள தேவாலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை விழா நடத்துவதற்காகவும் கச்சத்தீவு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 1974 ம் ஆண்டு அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லையை வரையறுக்க முற்பட்டார்.

அதாவது வங்களா விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியை வரையறை செய்ய வேண்டும் என்று ஒரு திட்டத்தை முன்னெடுத்தார். அப்போதுதான் இலங்கை அரசு கச்சத்தீவு விவகாரத்தை முன் வைத்தது. இதையடுத்து இரு நாடுகளும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டன.

சும்மா ஒன்றும் இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கவில்லை. ஒன்றைக் கொடுத்து ஒன்றை பெறுவது தான் உடன்படிக்கை. அதன்படி 1974 ம் ஆண்டில் இந்திய நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக மக்களுக்கும், மீனவர்களுக்கும் எது பலனளிக்கும் என்ற தொலைநோக்கில் கச்சத்தீவானது இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.

அதற்கு மாறாக 1976 ம் ஆண்டு மார்ச் 23 ம் தேதி, மன்னார் வளைகுடா - வங்காள விரிகுடா கடல் எல்லை வரையறை செய்யப்பட்டு, “வேட்ஜ் பேங்” என்ற பகுதியை இந்தியா எடுத்துக் கொண்டது. கிட்டத்தட்ட 10 ஆயிரம் சதுர கிமீ கொண்ட கன்னியாகுமரியின் தெற்கே கடல் பகுதி இந்திய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது. அது இன்று 25 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட கடல் பகுதியாக உள்ளது.

வெறும் 285 ஏக்கர் நிலத்தை கொடுத்துவிட்டு, பத்தாயிரம் சதுர கிமீ கொண்ட 25 லட்சம் ஏக்கரை கடலில் இந்தியா எடுத்துள்ளது. இதுதான் அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை. அந்த கடல் நில பரப்பில் 60க்கும் மேற்பட்ட அரிய வகை மீன் இனங்கள் உள்ளன. அந்த பகுதியை பயன்படுத்தித் தான் கன்னியாகுமரி, குளச்சல் மற்றும் கேரள மாநில மீனவர்கள் பல லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் நீடித்த நிலையான முடிவை கொச்சைப்படுத்தும் வகையில் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் பேசி வருகின்றனர். அவர்களது பேச்சில் உண்மை இல்லை, தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி நாடகம் நடத்துகிறது. அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்திரா காந்தி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது தான் உண்மை”, என விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக Vs பாஜக என மாறுகிறதா தேர்தல் களம்? - உண்மை நிலவரம் என்ன? - DMK VS BJP

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.