ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. காரணம் என்ன? - IAS Transfers in TN

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 9:38 PM IST

IAS Transfers in TN: மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

Tn
தலைமைச் செயலகம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீதா ஹரிஷ் தாகூர், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம், பொது மற்றும் மறு வாழ்வுத்துறை செயலாளராக உள்ள கே.நந்தகுமார், மனிதவள மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ்.நாகராஜன், நிதித்துறை (செலவுகள்) செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளராக சகி தாமஸ் வைத்தியன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநர் சரவணவேல் ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் தலைவராக உள்ள சி.விஜயராஜ், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதேநேரம், தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள டி.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். உலக வர்த்தக அமைப்பிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் பிரஜேந்திர நவ்னிட், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவர் தனது விடுப்பு முடிந்து இப்பொறுப்பை ஏற்பார் என்றும், 16வது நிதிக்குழுவின் சிறப்பு அதிகாரியாகவும் செயல்படுவார் என்றும் அரசு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சியின் துணை ஆணையர் சிவ கிருஷ்ணமுர்த்தி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நிதித்துறையின் சிறப்பு செயலாளராகவும், பூஜா குல்கர்னி செயல்படுவார் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. அதேபோல், சேலம் கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை ஐஏஸ், தமிழ்நாடு வழிகாட்டுதல் அமைப்பின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சேகார்வ் அமைப்பின் மேலாண் இயக்குனரான லலிதடியா நீலம், சேலம் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசு மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீதா ஹரிஷ் தாகூர், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம், பொது மற்றும் மறு வாழ்வுத்துறை செயலாளராக உள்ள கே.நந்தகுமார், மனிதவள மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ்.நாகராஜன், நிதித்துறை (செலவுகள்) செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளராக சகி தாமஸ் வைத்தியன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநர் சரவணவேல் ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் தலைவராக உள்ள சி.விஜயராஜ், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதேநேரம், தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள டி.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். உலக வர்த்தக அமைப்பிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் பிரஜேந்திர நவ்னிட், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவர் தனது விடுப்பு முடிந்து இப்பொறுப்பை ஏற்பார் என்றும், 16வது நிதிக்குழுவின் சிறப்பு அதிகாரியாகவும் செயல்படுவார் என்றும் அரசு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சியின் துணை ஆணையர் சிவ கிருஷ்ணமுர்த்தி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நிதித்துறையின் சிறப்பு செயலாளராகவும், பூஜா குல்கர்னி செயல்படுவார் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. அதேபோல், சேலம் கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை ஐஏஸ், தமிழ்நாடு வழிகாட்டுதல் அமைப்பின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சேகார்வ் அமைப்பின் மேலாண் இயக்குனரான லலிதடியா நீலம், சேலம் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசு மீது தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.