ETV Bharat / state

நீலகிரியில் 2 புலிகளுக்கு விஷம் வைத்துக் கொன்ற கொடூரம்..வடமாநிலத்தை சேர்ந்த மூவர் கைது! - nilgiri tiger death

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 2:11 PM IST

nilgiri tiger death: நீலகிரியில், தோல் மற்றும் நகங்களுக்காக 2 புலிகளை விஷம் வைத்து கொன்றதாக வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள், கொல்லப்பட்ட புலி
கைது செய்யப்பட்டுள்ள நபர்கள், கொல்லப்பட்ட புலி (Credits - ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் கடந்த 20ம் தேதி தனியார் தேயிலைத் தோட்டத்தில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. வனத்துறையினர் அப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் அருகில் பன்றி ஒன்றும் இறந்து கிடந்தது.

இதனையடுத்து இறந்து போன 2 புலி மற்றும் பன்றி ஆகியவற்றை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் புலியைக் கொல்ல, காட்டுப் பன்றியின் சடலத்திற்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனைச் சாப்பிட்ட புலிகள் இறந்ததாக வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரையின்படி வனச்சரகர் ரவி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்த வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் புலிகள் இறந்து கிடந்த பகுதியிலுள்ள வசித்து வரும் பொதுமக்கள், அங்குள்ள எஸ்டேட் நிர்வாகம் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்கள் எனப் பலரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சூர்யநாத் பராக் (35), அமன் கோயாலா (24), சுரேஷ் நன்வார் (25) 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு அதில் நீக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் மீட்கப்பட்டன.

அதில் இறந்த காட்டுப்பன்றி படங்கள் இருந்ததும், அவர்களின் தொலைப்பேசிகளில் இருந்து கடந்த காலங்களில் காட்டுப் பன்றி கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து உயிரிழந்த பன்றியின் மீது விஷத்தை ஊற்றி புலிகளைக் கொன்றதை 3 பேரும் ஒப்புக்கொண்டனர்.

புலிகளின் தோல், பற்கள் மற்றும் நகங்களுக்காக அவற்றைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். புலி இறந்த விவகாரத்தில், நான்கு நாட்களில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

வனத்துறையினர் எச்சரிக்கை: வனவிலங்குகளைத் துன்புறுத்துவதும் அதனைக் கொல்வது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வனத்துறை பாதுகாப்பு சட்டம், WPA 1972 கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து வரும் நாள்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சிலிண்டர் காலியாவதை இனி இப்படி தெரிந்து கொள்ளலாம்.. மதுரை பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் கடந்த 20ம் தேதி தனியார் தேயிலைத் தோட்டத்தில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. வனத்துறையினர் அப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் அருகில் பன்றி ஒன்றும் இறந்து கிடந்தது.

இதனையடுத்து இறந்து போன 2 புலி மற்றும் பன்றி ஆகியவற்றை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் புலியைக் கொல்ல, காட்டுப் பன்றியின் சடலத்திற்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனைச் சாப்பிட்ட புலிகள் இறந்ததாக வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரையின்படி வனச்சரகர் ரவி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்த வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் புலிகள் இறந்து கிடந்த பகுதியிலுள்ள வசித்து வரும் பொதுமக்கள், அங்குள்ள எஸ்டேட் நிர்வாகம் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்கள் எனப் பலரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சூர்யநாத் பராக் (35), அமன் கோயாலா (24), சுரேஷ் நன்வார் (25) 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு அதில் நீக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் மீட்கப்பட்டன.

அதில் இறந்த காட்டுப்பன்றி படங்கள் இருந்ததும், அவர்களின் தொலைப்பேசிகளில் இருந்து கடந்த காலங்களில் காட்டுப் பன்றி கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து உயிரிழந்த பன்றியின் மீது விஷத்தை ஊற்றி புலிகளைக் கொன்றதை 3 பேரும் ஒப்புக்கொண்டனர்.

புலிகளின் தோல், பற்கள் மற்றும் நகங்களுக்காக அவற்றைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். புலி இறந்த விவகாரத்தில், நான்கு நாட்களில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

வனத்துறையினர் எச்சரிக்கை: வனவிலங்குகளைத் துன்புறுத்துவதும் அதனைக் கொல்வது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வனத்துறை பாதுகாப்பு சட்டம், WPA 1972 கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து வரும் நாள்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சிலிண்டர் காலியாவதை இனி இப்படி தெரிந்து கொள்ளலாம்.. மதுரை பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.