ETV Bharat / state

சென்னை, வண்டலூர் அருகே சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ரவிகுமார் உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 8:14 PM IST

Thiruvallur EX MLA Accident: சென்னை மீஞ்சூர் அருகே நடந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் பொன்னேரி எம்.எல்.ஏ ரவிக்குமார் உயிரிழந்தார்.

Tiruvallur EX MLA accident
சாலை விபத்தில் அதிமுக முன்னாள் பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் ரவிகுமார் உயிரிழந்தார்

திருவள்ளூர்: பொன்னேரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் (63). மணலிபுதுநகர் நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இவர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். மேலும் கடந்த 1991 - 1996இல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில், அதிமுகவின் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

அதனிடையே ரவிகுமார், திண்டுக்கல் தொகுதியில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினரான நிர்மலாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், சென்னையில் மருத்துவம் பயின்று வரும் அவரது மகள் ரவீனா, வார விடுமுறைக்காக ஊருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விடுமுறை முடிந்த நிலையில், சென்னையில் உள்ள மகளின் கல்லூரிக்கு, ரவிக்குமார் தமது காரில் மனைவி நிர்மலாவுடன் சென்று மகளை விட்டு விட்டுத் திரும்பி வந்துள்ளார்.

அப்போது, மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்டச் சாலை, சீமாவரம் பகுதியில் முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்னால் கார் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. அதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, பின்னர் இருவரையும் மீஞ்சூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலே ரவிக்குமார் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த அவரது மனைவி நிர்மலாவுக்கு, சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநர் இன்று விடுப்பு எடுத்துக் கொண்டதால் ரவிக்குமாரே காரை ஓட்டிச் சென்றதாகவும், அப்போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உ.பியில் டிராக்டர் மீது பேருந்து மோதிய விபத்து.. 6 பேர் பலி; 6 பேர் பலத்த காயம்..!

திருவள்ளூர்: பொன்னேரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் (63). மணலிபுதுநகர் நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இவர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். மேலும் கடந்த 1991 - 1996இல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில், அதிமுகவின் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.

அதனிடையே ரவிகுமார், திண்டுக்கல் தொகுதியில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினரான நிர்மலாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், சென்னையில் மருத்துவம் பயின்று வரும் அவரது மகள் ரவீனா, வார விடுமுறைக்காக ஊருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விடுமுறை முடிந்த நிலையில், சென்னையில் உள்ள மகளின் கல்லூரிக்கு, ரவிக்குமார் தமது காரில் மனைவி நிர்மலாவுடன் சென்று மகளை விட்டு விட்டுத் திரும்பி வந்துள்ளார்.

அப்போது, மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்டச் சாலை, சீமாவரம் பகுதியில் முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்னால் கார் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. அதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, பின்னர் இருவரையும் மீஞ்சூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலே ரவிக்குமார் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த அவரது மனைவி நிர்மலாவுக்கு, சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநர் இன்று விடுப்பு எடுத்துக் கொண்டதால் ரவிக்குமாரே காரை ஓட்டிச் சென்றதாகவும், அப்போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உ.பியில் டிராக்டர் மீது பேருந்து மோதிய விபத்து.. 6 பேர் பலி; 6 பேர் பலத்த காயம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.