ETV Bharat / state

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு! - Vaigai dam open for irrigation

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2024, 4:12 PM IST

Vaigai dam open for irrigation: தேனி மாவட்டம், வைகை அணையில் இருந்து இன்று மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒருபோக பாசனத்திற்காக அமைச்சர் மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார்.

தேனி  வைகை அணை மதகுகளை இயக்கி நீர் திறந்து வைக்கிறார்
தேனி வைகை அணை மதகுகளை இயக்கி நீர் திறந்து வைக்கிறார் (Credits- ETV Bharat Tamil Nadu)

தேனி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், வைகை அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருபோக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அந்தக் கோரிக்கையை ஏற்று மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒருபோக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, இன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதகுகளை இயக்கி, வைகை அணையில் இருந்து ஒருபோக பாசனத்திற்காக வினாடிக்கு 1,130 கனஅடி தண்ணீர் பாசன கால்வாய் மூலம் திறந்து வைத்தார்.

இதில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொண்டனர். திறக்கப்பட்ட தண்ணீர் வைகை அணையின் பிரதான ஏழு மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து வெளியேறியது. தற்போது திறக்கப்படும் தண்ணீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி, மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1,05,005 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதையும் படிங்க: ராசி மணலில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்..காவிரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்!

மொத்தம் 120 நாட்கள் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் 45 நாட்கள் தொடர்ச்சியாகவும், மீதமுள்ள நாட்களில் தண்ணீரின் இருப்பை பொறுத்து முறை வைத்து திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால், வைகை அணையின் நீர்மட்டம் குறைவதை ஈடு செய்யும் விதமாக, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வைகை அணைக்கு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வைகை அணையின் பாசனக் கால்வாய் வழியாக வினாடிக்கு 2,000 கன அடி வரை திறக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கால்வாயில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், வைகை அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருபோக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அந்தக் கோரிக்கையை ஏற்று மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒருபோக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, இன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதகுகளை இயக்கி, வைகை அணையில் இருந்து ஒருபோக பாசனத்திற்காக வினாடிக்கு 1,130 கனஅடி தண்ணீர் பாசன கால்வாய் மூலம் திறந்து வைத்தார்.

இதில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொண்டனர். திறக்கப்பட்ட தண்ணீர் வைகை அணையின் பிரதான ஏழு மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து வெளியேறியது. தற்போது திறக்கப்படும் தண்ணீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி, மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1,05,005 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதையும் படிங்க: ராசி மணலில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்..காவிரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்!

மொத்தம் 120 நாட்கள் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் 45 நாட்கள் தொடர்ச்சியாகவும், மீதமுள்ள நாட்களில் தண்ணீரின் இருப்பை பொறுத்து முறை வைத்து திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால், வைகை அணையின் நீர்மட்டம் குறைவதை ஈடு செய்யும் விதமாக, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வைகை அணைக்கு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வைகை அணையின் பாசனக் கால்வாய் வழியாக வினாடிக்கு 2,000 கன அடி வரை திறக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கால்வாயில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.