ETV Bharat / state

"கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட திமுகவிற்கா வாக்களிக்க வேண்டும்" - ஜான்பாண்டியன்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Tenkasi Candidate John Pandian: கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட திமுகவிற்கா வாக்களிக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என தென்காசி நாடாளுமன்ற வேட்பாளர் ஜான்பாண்டியன் பேசியுள்ளார்.

தென்காசி
தென்காசி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 5:38 PM IST

"கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட திமுகவிற்கா வாக்களிக்க வேண்டும்" - வேட்பாளர் ஜான்பாண்டியன்!

தென்காசி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி 40 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் தென்காசி மாவட்டம் புளியங்குடி, அய்யாபுரம் பாம்புக் கோவில்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் அவர் பேசுகையில், மீண்டும் மோடி வேண்டும். மோடி பிரதமர் ஆவது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் எதிர்க்கட்சியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று இதுவரை அறிவிக்கவில்லை. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரா? அவரது மகன் பிரதமர் வேட்பாளரா? என கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து, 57 லட்சம் காங்கிரீட் வீடுகளை பொது மக்களுக்குக் கட்டிக் கொடுத்தது மோடி அரசு. ரேஷன் கடையில் 20 கிலோ அரிசி வழங்கியது மோடி அரசு. விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்கியது மோடி அரசு. நீண்ட நாள் கோரிக்கையான ஏழு உட்பிரிவுகளைக் கொண்ட தேவேந்திர குல வேளாளர் என அரசாணை கொண்டு வந்தது பாரத பிரதமர் நரேந்திர மோடி தான். பட்டியல் இனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றால் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்.

ஏழைகளுக்காகப் பாடுபட்டவர் நரேந்திர மோடி. ஆனால் மோடிக்கு ஒரு அடி இடம் சொந்தமாக உள்ளதா? ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளதா என எண்ணிப் பார்க்க வேண்டும். இரண்டரை லட்சம் கோடி ஸ்டாலினும் அவரது குடும்பமும் வைத்திருப்பதாக அண்ணாமலை ஏற்கனவே சொல்லி இருந்தார். ஆனால் அவர் அதை மறுத்தாரா?

கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட திமுகவிற்கா வாக்களிக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்துக்களை அசிங்கப்படுத்திவிட்டு எந்த தைரியத்தில் பொதுமக்களிடம் திமுகவினர் வாக்கு கேட்க வருகின்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கிறிஸ்தவர்களும் இந்துக்களும் ஒன்றாய் இருக்கக் கூடாது. இஸ்லாமியர்களும் இந்துக்களும் பழகவே கூடாது என்று திமுக நினைக்கிறது. இப்படிப்பட்ட திமுகவுக்கு நீங்க வாக்களிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியதோடு நல்லாட்சி அமைய விவசாயம் செழிக்கத் தென்காசி பசுமையான பகுதியாக மாற தாமரை சின்னத்தில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: "ஜெயலலிதா மகள் என்ற காரணத்தால் எனக்கு தடங்கல் செய்கின்றனர்" - ஜெயலட்சுமி குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024

"கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட திமுகவிற்கா வாக்களிக்க வேண்டும்" - வேட்பாளர் ஜான்பாண்டியன்!

தென்காசி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி 40 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் தென்காசி மாவட்டம் புளியங்குடி, அய்யாபுரம் பாம்புக் கோவில்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் அவர் பேசுகையில், மீண்டும் மோடி வேண்டும். மோடி பிரதமர் ஆவது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் எதிர்க்கட்சியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று இதுவரை அறிவிக்கவில்லை. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரா? அவரது மகன் பிரதமர் வேட்பாளரா? என கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து, 57 லட்சம் காங்கிரீட் வீடுகளை பொது மக்களுக்குக் கட்டிக் கொடுத்தது மோடி அரசு. ரேஷன் கடையில் 20 கிலோ அரிசி வழங்கியது மோடி அரசு. விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்கியது மோடி அரசு. நீண்ட நாள் கோரிக்கையான ஏழு உட்பிரிவுகளைக் கொண்ட தேவேந்திர குல வேளாளர் என அரசாணை கொண்டு வந்தது பாரத பிரதமர் நரேந்திர மோடி தான். பட்டியல் இனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றால் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்.

ஏழைகளுக்காகப் பாடுபட்டவர் நரேந்திர மோடி. ஆனால் மோடிக்கு ஒரு அடி இடம் சொந்தமாக உள்ளதா? ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளதா என எண்ணிப் பார்க்க வேண்டும். இரண்டரை லட்சம் கோடி ஸ்டாலினும் அவரது குடும்பமும் வைத்திருப்பதாக அண்ணாமலை ஏற்கனவே சொல்லி இருந்தார். ஆனால் அவர் அதை மறுத்தாரா?

கொள்ளையடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட திமுகவிற்கா வாக்களிக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்துக்களை அசிங்கப்படுத்திவிட்டு எந்த தைரியத்தில் பொதுமக்களிடம் திமுகவினர் வாக்கு கேட்க வருகின்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கிறிஸ்தவர்களும் இந்துக்களும் ஒன்றாய் இருக்கக் கூடாது. இஸ்லாமியர்களும் இந்துக்களும் பழகவே கூடாது என்று திமுக நினைக்கிறது. இப்படிப்பட்ட திமுகவுக்கு நீங்க வாக்களிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பியதோடு நல்லாட்சி அமைய விவசாயம் செழிக்கத் தென்காசி பசுமையான பகுதியாக மாற தாமரை சின்னத்தில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: "ஜெயலலிதா மகள் என்ற காரணத்தால் எனக்கு தடங்கல் செய்கின்றனர்" - ஜெயலட்சுமி குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.