ETV Bharat / state

தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் அறிக்கை வெளியீடு.. அது என்னப்பா 'அக்கா 1825'? - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Tamilisai Soundararajan Election Manifesto: தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், 'அக்கா 1825' என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Tamilisai Soundararajan Election Manifesto
தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் அறிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 3:16 PM IST

சென்னை: தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், 5 ஆண்டுகளுக்கு 365 நாட்கள் என்ற கணக்கில், 1825 நாட்களும் மக்கள் பணியாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் 'அக்கா 1825' என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கை பின்வருமாறு;

குடிநீர் மற்றும் மழை நீர் பிரச்சனைக்குத் தீர்வு:

  • கோதாவரி ஆற்றுநீரைச் சென்னைக்குக் கொண்டுவர நடவடிக்கை.
  • தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் விரைவுபடுத்த நடவடிக்கை.
  • நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுச் சீரமைக்கப்படும்.
  • மழை நீர் கால்வாய் அமைக்கப்படும்.
  • விருகம்பாக்கம் கால்வாயைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மழைக்காலங்களில் உடனடியாக உதவிக்கு வருவோர் பிரிவு (First responders project) அமைக்கப்படும்.
  • மீட்பு படகுகள், மருத்துவப் பொருட்கள், உயர் சக்தி கொண்ட நீரேற்றும் பம்புகள், மீட்பு டிரக்குகள் ஆகியவற்றைக் கொண்ட முதல் பதிலளிப்போர் முற்றம் (First responders yard) உருவாக்கப்படும்.

போக்குவரத்து பிரச்சனைக்குத் தீர்வு:

  • புதிய வழித்தடத்தில் மெட்ரோ-3 திட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மெட்ரோ ரயில்-2 திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
  • வடபழனி, திருவான்மியூர், தி.நகர் பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
  • வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்கப்படும்.
  • சென்னை - கடலூர் இடையே கடல் வழி போக்குவரத்து.
  • அம்மா உணவகங்கள் போல், ரயில் நிலையங்களில் மோடி உணவகங்கள் அமைக்கப்படும்.

பொதுச் சுகாதாரம்:

  • தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூரில் ESI அரசு மருத்துவமனை.
  • தேவைப்படும் இடங்களில் புதிதாக ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
  • தற்போதுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
  • நடமாடும் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படும்.
  • ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவம் பார்த்துக் கொள்வதற்கான பிரதமரின் காப்பீட்டுத் திட்டம்.
  • சட்டமன்றத் தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் 3 இலவச பொது உடற்பயிற்சி கூடங்கள்.
  • பொதுக் கழிப்பிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
  • நடமாடும் கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்படும்.
  • போதையில் இருந்து விடுவிப்பதற்கான மறுவாழ்வு மையம் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏற்படுத்தப்படும்.

மாணவர் மற்றும் இளையோர் நலன்:

  • எம்.பியாக நான் பெரும் ஊதியம் முழுவதும், ஏழை மாணவர்களின் கல்விக்காகச் செலவிடப்படும்.
  • பள்ளிகளில், இளம் சிந்தனையாளர்களை ஊக்குவிக்கும், இளைஞர் நாடாளுமன்றம் உருவாக்கப்படும்.
  • விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சென்னை சவுத் ஒலிம்பியாட் விளையாட்டு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.
  • வளரும் விளையாட்டு வீரர்களுக்கான பிரத்தியேக விளையாட்டு அரங்கம், 2027க்குள் அமைக்கப்படும்.
  • அரசு கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு அரசு கலைக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்.
  • ஆண்டுக்கு இருமுறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
  • நீட் உள்ளிட்ட மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு, இலவச பயிற்சி மையங்கள்.
  • புதிய நூலகங்களை உருவாக்க நடவடிக்கை.
  • கூடுதல் தொழிற்பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் மற்றும் குடும்ப நலன்:

  • தென் சென்னை சட்டமன்றத் தொகுதிகளில் பணி புரியும் மகளிருக்கு விடுதி.
  • பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, குடியிருப்பு பகுதிகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள.
  • இளம்பெண் அரசியல்வாதிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'வீரப் பெண் திட்டம்'
  • பெண்களுக்கான திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
  • பணிபுரியும் பெண்களுக்காக 'மோடி இலவச ஷேர் ஆட்டோக்கள்' இயக்கப்படும்.
  • ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆறு சமுதாயக் கூடங்கள் அமைக்கப்படும்.

மீனவர் நலன்:

  • மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • மீன் பிடி தொழில், வணிக முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை தொழிலாக மாற்ற நடவடிக்கை.
  • மிகப்பெரிய மீன் விற்பனை சந்தை அமைக்கப்படும்.
  • மீன்பிடி பகுதிகளில் உணவு பதப்படுத்துதல், மீன் குளிர் சாதன சேமிப்பு வசதிகள் வழங்கப்படும்.
  • மீனவ கிராமங்களில் உள்ள வீடுகள் சீர் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • மீனவ கிராமங்களில் நூலகங்கள், கணினி மையங்கள் அமைக்கப்படும்.
  • மீனவ இளைஞர் மேம்பாட்டுக்கு, பல திட்டங்கள் கொண்டுவரப்படும்.
  • திறந்த வெளி உடற்பயிற்சி கூடங்கள் (Open Gym) கடற்கரை ஓரங்களில் அமைக்க ஏற்பாடு.
  • மீன்களைப் போலக் கருவாடு தொழிலும், அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றப்படும்.

இதையும் படிங்க: 'நயந்தாரா ஆடினால் பார்க்கும் நீங்கள்..இவர்களையும் பாருங்கள்' - நடிகர் ராகவா லாரன்ஸ் - Actor Raghava Lawrence

சென்னை: தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், 5 ஆண்டுகளுக்கு 365 நாட்கள் என்ற கணக்கில், 1825 நாட்களும் மக்கள் பணியாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் 'அக்கா 1825' என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கை பின்வருமாறு;

குடிநீர் மற்றும் மழை நீர் பிரச்சனைக்குத் தீர்வு:

  • கோதாவரி ஆற்றுநீரைச் சென்னைக்குக் கொண்டுவர நடவடிக்கை.
  • தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் விரைவுபடுத்த நடவடிக்கை.
  • நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுச் சீரமைக்கப்படும்.
  • மழை நீர் கால்வாய் அமைக்கப்படும்.
  • விருகம்பாக்கம் கால்வாயைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மழைக்காலங்களில் உடனடியாக உதவிக்கு வருவோர் பிரிவு (First responders project) அமைக்கப்படும்.
  • மீட்பு படகுகள், மருத்துவப் பொருட்கள், உயர் சக்தி கொண்ட நீரேற்றும் பம்புகள், மீட்பு டிரக்குகள் ஆகியவற்றைக் கொண்ட முதல் பதிலளிப்போர் முற்றம் (First responders yard) உருவாக்கப்படும்.

போக்குவரத்து பிரச்சனைக்குத் தீர்வு:

  • புதிய வழித்தடத்தில் மெட்ரோ-3 திட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மெட்ரோ ரயில்-2 திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
  • வடபழனி, திருவான்மியூர், தி.நகர் பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
  • வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்கப்படும்.
  • சென்னை - கடலூர் இடையே கடல் வழி போக்குவரத்து.
  • அம்மா உணவகங்கள் போல், ரயில் நிலையங்களில் மோடி உணவகங்கள் அமைக்கப்படும்.

பொதுச் சுகாதாரம்:

  • தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூரில் ESI அரசு மருத்துவமனை.
  • தேவைப்படும் இடங்களில் புதிதாக ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
  • தற்போதுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
  • நடமாடும் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படும்.
  • ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவம் பார்த்துக் கொள்வதற்கான பிரதமரின் காப்பீட்டுத் திட்டம்.
  • சட்டமன்றத் தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் 3 இலவச பொது உடற்பயிற்சி கூடங்கள்.
  • பொதுக் கழிப்பிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
  • நடமாடும் கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்படும்.
  • போதையில் இருந்து விடுவிப்பதற்கான மறுவாழ்வு மையம் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏற்படுத்தப்படும்.

மாணவர் மற்றும் இளையோர் நலன்:

  • எம்.பியாக நான் பெரும் ஊதியம் முழுவதும், ஏழை மாணவர்களின் கல்விக்காகச் செலவிடப்படும்.
  • பள்ளிகளில், இளம் சிந்தனையாளர்களை ஊக்குவிக்கும், இளைஞர் நாடாளுமன்றம் உருவாக்கப்படும்.
  • விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சென்னை சவுத் ஒலிம்பியாட் விளையாட்டு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.
  • வளரும் விளையாட்டு வீரர்களுக்கான பிரத்தியேக விளையாட்டு அரங்கம், 2027க்குள் அமைக்கப்படும்.
  • அரசு கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு அரசு கலைக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்.
  • ஆண்டுக்கு இருமுறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
  • நீட் உள்ளிட்ட மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு, இலவச பயிற்சி மையங்கள்.
  • புதிய நூலகங்களை உருவாக்க நடவடிக்கை.
  • கூடுதல் தொழிற்பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் மற்றும் குடும்ப நலன்:

  • தென் சென்னை சட்டமன்றத் தொகுதிகளில் பணி புரியும் மகளிருக்கு விடுதி.
  • பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, குடியிருப்பு பகுதிகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள.
  • இளம்பெண் அரசியல்வாதிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'வீரப் பெண் திட்டம்'
  • பெண்களுக்கான திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
  • பணிபுரியும் பெண்களுக்காக 'மோடி இலவச ஷேர் ஆட்டோக்கள்' இயக்கப்படும்.
  • ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆறு சமுதாயக் கூடங்கள் அமைக்கப்படும்.

மீனவர் நலன்:

  • மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • மீன் பிடி தொழில், வணிக முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை தொழிலாக மாற்ற நடவடிக்கை.
  • மிகப்பெரிய மீன் விற்பனை சந்தை அமைக்கப்படும்.
  • மீன்பிடி பகுதிகளில் உணவு பதப்படுத்துதல், மீன் குளிர் சாதன சேமிப்பு வசதிகள் வழங்கப்படும்.
  • மீனவ கிராமங்களில் உள்ள வீடுகள் சீர் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • மீனவ கிராமங்களில் நூலகங்கள், கணினி மையங்கள் அமைக்கப்படும்.
  • மீனவ இளைஞர் மேம்பாட்டுக்கு, பல திட்டங்கள் கொண்டுவரப்படும்.
  • திறந்த வெளி உடற்பயிற்சி கூடங்கள் (Open Gym) கடற்கரை ஓரங்களில் அமைக்க ஏற்பாடு.
  • மீன்களைப் போலக் கருவாடு தொழிலும், அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றப்படும்.

இதையும் படிங்க: 'நயந்தாரா ஆடினால் பார்க்கும் நீங்கள்..இவர்களையும் பாருங்கள்' - நடிகர் ராகவா லாரன்ஸ் - Actor Raghava Lawrence

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.