ETV Bharat / state

தமிழ்நாடு நிலச் சீர்திருத்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்! - TN Assembly session 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 3:18 PM IST

TN Assembly session 2024: திருமணமாகாத ஆண்களுக்கு இணையாக திருமணமாகாத மகளிருக்கும் சம உரிமைகளை வழங்க தமிழ்நாடு நிலச் சீர்திருத்தச் சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிறைவேற்றினார்.

தமிழ்நாடு முதலமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர் புகைப்படம்
முக ஸ்டாலின் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (Credits - KKSSR Ramachandran X Page)

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் வருவாய்த்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசினார்.

அப்போது பேசிய அவர், "திருமணம் ஆகாத ஆண்களுக்கு இணையாக திருமணம் ஆகாத மகளிருக்கும் சம உரிமைகளை வழங்க தமிழ்நாடு நிலச் சீர்திருத்தச் சட்டத்தில் குடும்பம் என்பதற்கான பொருள் வரையறையிலிருந்து, திருமணமாகாத மகள்கள் மற்றும் திருமணமாகாத பேத்திகள் எனும் சொற்றொடர்கள் விட்டுவிடப்பட்டு, சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட உச்சவரம்பு பரப்பளவு வரையிலான நிலங்களை உரிமை வயதடைந்த திருமணமாகாத மகளிர் தனியாக உடைமையில் கொண்டிருப்பதை இயல்விப்பதற்காக உரிமை வயதடையாத குழந்தைகள் மற்றும் உரிமை வயதடையாத பேரக்குழந்தைகள் எனும் சொற்றொடர்கள் மாற்றாக அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதன்படி, இது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: 'இப்போ தெரிகிறதா'?.. சட்டென குறுக்கிட்ட துரைமுருகன்.. உடனே பிடிஆர் விட்ட சவால்! - pazhanivel thiyagarajan speech

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் வருவாய்த்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசினார்.

அப்போது பேசிய அவர், "திருமணம் ஆகாத ஆண்களுக்கு இணையாக திருமணம் ஆகாத மகளிருக்கும் சம உரிமைகளை வழங்க தமிழ்நாடு நிலச் சீர்திருத்தச் சட்டத்தில் குடும்பம் என்பதற்கான பொருள் வரையறையிலிருந்து, திருமணமாகாத மகள்கள் மற்றும் திருமணமாகாத பேத்திகள் எனும் சொற்றொடர்கள் விட்டுவிடப்பட்டு, சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட உச்சவரம்பு பரப்பளவு வரையிலான நிலங்களை உரிமை வயதடைந்த திருமணமாகாத மகளிர் தனியாக உடைமையில் கொண்டிருப்பதை இயல்விப்பதற்காக உரிமை வயதடையாத குழந்தைகள் மற்றும் உரிமை வயதடையாத பேரக்குழந்தைகள் எனும் சொற்றொடர்கள் மாற்றாக அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதன்படி, இது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: 'இப்போ தெரிகிறதா'?.. சட்டென குறுக்கிட்ட துரைமுருகன்.. உடனே பிடிஆர் விட்ட சவால்! - pazhanivel thiyagarajan speech

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.