ETV Bharat / state

தமிழகத்தில் மீண்டும் மினி பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு திட்டம்; ஜூலை 14 வரை பொதுமக்கள் கருத்து கூற ஏற்பாடு! - CHENNAI MINI BUS SERVICE - CHENNAI MINI BUS SERVICE

Chennai Mini bus service: தமிழ்நாட்டில் மினி பஸ்களை இயக்க மீண்டும் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சிற்றுந்து(கோப்புப்படம்)
சிற்றுந்து(கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 11:20 AM IST

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களின் அருகில் உள்ள பகுதிகளுடன் இணைப்பதற்கும், ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு திட்ட அறிக்கையின் படி, மாநிலம் முழுவதும் மினி பேருந்துகளை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளது.

சென்னையை பொறுத்தவரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மினி சேவை வழித்தடம் வழங்கப்பட மாட்டாது. அதேநேரத்தில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்பட உள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் எந்தெந்த வழித்தடங்களில் மினி பேருந்து சேவைகளுக்கு அனுமதி வழங்குவது மற்றும் எவ்வளவு பேருந்துகளுக்கு அனுமதி வழங்குவது என்பதை, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள்(RTO) முடிவு செய்து, அதற்கான அனுமதியை வழங்குவார்கள் என்று அரசு அறிவித்திருக்கிறது.

அதிகபட்சமாக 25 கி.மீ., தூரம் வரை மினி பஸ்களை இயக்கவும், இதில் 18 கி.மீ., தொலைவுக்கு சேவை இல்லாத வழித்தடங்களிலும், 8 கி.மீ., தொலைவுக்கு ஏற்கனவே சேவை உள்ள வழித்தடங்களிலும் அனுமதி வழங்கப்படும் எனவும் வரைவு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தவிர்த்து ஒரு மினி பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் பயணம் செய்யும் வகையில் இருக்கை வசதி இருக்கலாம் என்றும், அனைத்து மினி பஸ்களிலும், ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மினி பஸ் வரைவு திட்ட அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், இதன்படி ஜூலை 14ஆம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் ஜூலை 22ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விபரீத ஆட்டோ ரேஸ்! விபத்தில் நிகழந்த உயிரிழப்புகள்- அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள்..! - POONDHAMALI AUTO RACE VIDEO

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களின் அருகில் உள்ள பகுதிகளுடன் இணைப்பதற்கும், ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு திட்ட அறிக்கையின் படி, மாநிலம் முழுவதும் மினி பேருந்துகளை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளது.

சென்னையை பொறுத்தவரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மினி சேவை வழித்தடம் வழங்கப்பட மாட்டாது. அதேநேரத்தில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்பட உள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் எந்தெந்த வழித்தடங்களில் மினி பேருந்து சேவைகளுக்கு அனுமதி வழங்குவது மற்றும் எவ்வளவு பேருந்துகளுக்கு அனுமதி வழங்குவது என்பதை, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள்(RTO) முடிவு செய்து, அதற்கான அனுமதியை வழங்குவார்கள் என்று அரசு அறிவித்திருக்கிறது.

அதிகபட்சமாக 25 கி.மீ., தூரம் வரை மினி பஸ்களை இயக்கவும், இதில் 18 கி.மீ., தொலைவுக்கு சேவை இல்லாத வழித்தடங்களிலும், 8 கி.மீ., தொலைவுக்கு ஏற்கனவே சேவை உள்ள வழித்தடங்களிலும் அனுமதி வழங்கப்படும் எனவும் வரைவு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தவிர்த்து ஒரு மினி பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் பயணம் செய்யும் வகையில் இருக்கை வசதி இருக்கலாம் என்றும், அனைத்து மினி பஸ்களிலும், ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மினி பஸ் வரைவு திட்ட அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், இதன்படி ஜூலை 14ஆம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் ஜூலை 22ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விபரீத ஆட்டோ ரேஸ்! விபத்தில் நிகழந்த உயிரிழப்புகள்- அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள்..! - POONDHAMALI AUTO RACE VIDEO

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.