ETV Bharat / state

மது அருந்தியவாறே காரின் வெளியில் பயணம்.. சட்டக் கல்லூரி மாணவர் கைது! - LOVERS DRANK BEER VIDEO CASE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 10:41 PM IST

LOVERS DRANK BEER IN ROAD CASE: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் காரில் காதல் ஜோடியாக பீர் பாட்டிலை கையில் வைத்து குடித்துக்கொண்டே ஜாலியாக செல்லும் வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அச்சம்பவத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதுச் செய்யப்பட்ட சஞ்சய்
கைதுச் செய்யப்பட்ட சஞ்சய் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் பரப்பரப்பாக காணப்படுவது வழக்கம். இந்நிலையில், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் கருப்பு நிற கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் மேற்கூரை திறக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு ஆண் மற்றும் பெண் ஜோடியாக வெளியே வந்து கொஞ்சிக் கொண்டதுடன், ஆண் நபர் கையில் பீர் பாட்டிலை எடுத்து குடித்துக் கொண்டு ஜாலியாக செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இந்த வீடியோ காட்சி காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றதையடுத்து, காரின் பதிவெண்ணைக் கொண்டு முகவரியைக் கைப்பற்றிய போலீசார், அந்த காரில் குடித்தவாறு பயணித்தவர் பெருங்குடியைச் சேர்ந்த சஞ்சய் (23) மற்றும் அவரது பெண் தோழி சேர்ந்து மது அருந்தியவாறு காரில் சென்றது தெரியவந்தது.

மேலும், சஞ்சய் தனியார் கல்லூரியில் 5ஆம் ஆண்டு சட்டப்படிப்பை படித்து வருவதாக போலீசார் விசாரணையில் தெரிவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் போலீசார் சட்டக்கல்லூரி மாணவர் மீது பொதுமக்கள் செல்லும் பாதையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது மற்றும் குடித்துவிட்டு பொது இடத்தில் ஒழிங்கீனமாக நடப்பது என சட்டப் பிரிவு 281, 355 மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து, காரை பறிமுதல் செய்த நிலையில் சஞ்சயிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கோவை பாமக மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல்.. வீடியோ உடன் புகார்!

சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் பரப்பரப்பாக காணப்படுவது வழக்கம். இந்நிலையில், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் கருப்பு நிற கார் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் மேற்கூரை திறக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு ஆண் மற்றும் பெண் ஜோடியாக வெளியே வந்து கொஞ்சிக் கொண்டதுடன், ஆண் நபர் கையில் பீர் பாட்டிலை எடுத்து குடித்துக் கொண்டு ஜாலியாக செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், இந்த வீடியோ காட்சி காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றதையடுத்து, காரின் பதிவெண்ணைக் கொண்டு முகவரியைக் கைப்பற்றிய போலீசார், அந்த காரில் குடித்தவாறு பயணித்தவர் பெருங்குடியைச் சேர்ந்த சஞ்சய் (23) மற்றும் அவரது பெண் தோழி சேர்ந்து மது அருந்தியவாறு காரில் சென்றது தெரியவந்தது.

மேலும், சஞ்சய் தனியார் கல்லூரியில் 5ஆம் ஆண்டு சட்டப்படிப்பை படித்து வருவதாக போலீசார் விசாரணையில் தெரிவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் போலீசார் சட்டக்கல்லூரி மாணவர் மீது பொதுமக்கள் செல்லும் பாதையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது மற்றும் குடித்துவிட்டு பொது இடத்தில் ஒழிங்கீனமாக நடப்பது என சட்டப் பிரிவு 281, 355 மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து, காரை பறிமுதல் செய்த நிலையில் சஞ்சயிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கோவை பாமக மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல்.. வீடியோ உடன் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.