ETV Bharat / state

"இளம் தலைமுறையினர் இந்திய ராணுவத்தில் சேர சென்னை விமான சாககம் உத்வேகம் அளிக்கும்" - கேப்டன் நக்கீரன் பரனன்! - air show 2024

சென்னையில் நடைபெற்ற இந்திய விமானப் படை சாகசம் மூலமாக தமிழகத்திலிருந்து இந்திய விமான படையில் சேருபவர்களின் சதவிகிதம் அதிகரிக்கும் என தாம்பரம் விமான தளத்தின் குரூப் கேப்டன் நக்கீரன் பரனன் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

விமான சாகசம், தாம்பரம் விமான தளத்தின் கேப்டன் நக்கீரன் பரனன்
விமான சாகசம், தாம்பரம் விமான தளத்தின் கேப்டன் நக்கீரன் பரனன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சியானது இன்று காலை 11.00 - 1.00 மணி வரை நடைபெற்றது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் விமானம் உள்ளிட்ட விமானங்கள் சாகசத்தில் பங்கேற்றன. இந்த விமானங்கள் வானில் வட்டமிட்டும், செங்குத்தாக பறந்தும், இந்திய தேசியக் கொடி நிறத்தை புகைகள் மூலம் காண்பித்தும் என பல்வேறு சாகசங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு தாம்பரம் விமான தளத்தின் குருப் கேப்டன் நக்கீரன் பரனன் அளித்த சிறப்புப் பேட்டியில், "மக்களின் கால் தடத்தால் சென்னை அதிர்ந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் இதுபோன்ற நிகழ்வைப் பார்த்தது இல்லை. இதனைப் பார்த்து விழிப்புணர்வு ஏற்பட்டு உலகின் 4வது பெரிய விமானப் படையில் ஒரு அங்கமாகி சேவை செய்ய முன் வர உந்து சக்தியாக இருக்கும்.

விமானப் படையில் தேவையான அளவு ஆட்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இந்த சாகச நிகழ்ச்சி மூலமாக தமிழகத்திலிருந்து இந்திய விமானப் படையில் சேருபவர்களின் எண்ணிக்கை சதவிகிதம் அதிகமாகும்" என தெரிவித்தார்.

இதேபோல் இந்திய விமானப் படை சாகசத்தை பார்த்த சிறுவர், சிறுமியர்கள் கூறுகையில், "இதுபோன்ற வான் சாகச நிகழ்ச்சியை நாங்கள் பார்த்தது இல்லை. பார்ப்பதற்கு மிகவும் மகிழ்சியாக இருந்தது. விமானம் வட்டமிட்டு சென்றது. விமானம் வானில் இதயத்தை வரைந்து சென்றது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. மின்னல் வேகத்தில் மிகவும் நெருக்கமாக விமானங்கள் பறப்பதை பார்த்த உடன் தாங்களும் இதே போல் விமான படையில் இணைந்து வானில் பறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க : மெரினாவில் மெய்சிலிர்க்கும் விமான சாகசம்: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலை மோதிய மக்கள் கூட்டம்!

இதையடுத்து பேசிய பெற்றோர்கள், "குழந்தைகள் இதுபோன்ற வான் சாகச நிகழ்வை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அழைத்து வந்ததாகவும், கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. 11 மணிலிருந்து 1 மணி வரை வைத்த நிகழ்வை காலையில் 7.00 மணி அளவில் வைத்திருந்தால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்து இருக்கலாம்.

வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் ஏராளாமான மக்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை அருகே இருந்த மருத்துவ முகாம்கள் மூலம் முதலுதவி செய்து தேவைப்படுவோருக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் மெரினாவை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சியானது இன்று காலை 11.00 - 1.00 மணி வரை நடைபெற்றது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் விமானம் உள்ளிட்ட விமானங்கள் சாகசத்தில் பங்கேற்றன. இந்த விமானங்கள் வானில் வட்டமிட்டும், செங்குத்தாக பறந்தும், இந்திய தேசியக் கொடி நிறத்தை புகைகள் மூலம் காண்பித்தும் என பல்வேறு சாகசங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு தாம்பரம் விமான தளத்தின் குருப் கேப்டன் நக்கீரன் பரனன் அளித்த சிறப்புப் பேட்டியில், "மக்களின் கால் தடத்தால் சென்னை அதிர்ந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் இதுபோன்ற நிகழ்வைப் பார்த்தது இல்லை. இதனைப் பார்த்து விழிப்புணர்வு ஏற்பட்டு உலகின் 4வது பெரிய விமானப் படையில் ஒரு அங்கமாகி சேவை செய்ய முன் வர உந்து சக்தியாக இருக்கும்.

விமானப் படையில் தேவையான அளவு ஆட்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இந்த சாகச நிகழ்ச்சி மூலமாக தமிழகத்திலிருந்து இந்திய விமானப் படையில் சேருபவர்களின் எண்ணிக்கை சதவிகிதம் அதிகமாகும்" என தெரிவித்தார்.

இதேபோல் இந்திய விமானப் படை சாகசத்தை பார்த்த சிறுவர், சிறுமியர்கள் கூறுகையில், "இதுபோன்ற வான் சாகச நிகழ்ச்சியை நாங்கள் பார்த்தது இல்லை. பார்ப்பதற்கு மிகவும் மகிழ்சியாக இருந்தது. விமானம் வட்டமிட்டு சென்றது. விமானம் வானில் இதயத்தை வரைந்து சென்றது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. மின்னல் வேகத்தில் மிகவும் நெருக்கமாக விமானங்கள் பறப்பதை பார்த்த உடன் தாங்களும் இதே போல் விமான படையில் இணைந்து வானில் பறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க : மெரினாவில் மெய்சிலிர்க்கும் விமான சாகசம்: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலை மோதிய மக்கள் கூட்டம்!

இதையடுத்து பேசிய பெற்றோர்கள், "குழந்தைகள் இதுபோன்ற வான் சாகச நிகழ்வை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அழைத்து வந்ததாகவும், கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. 11 மணிலிருந்து 1 மணி வரை வைத்த நிகழ்வை காலையில் 7.00 மணி அளவில் வைத்திருந்தால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்து இருக்கலாம்.

வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் ஏராளாமான மக்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை அருகே இருந்த மருத்துவ முகாம்கள் மூலம் முதலுதவி செய்து தேவைப்படுவோருக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் மெரினாவை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.