ETV Bharat / state

திருச்சியில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்..வகுப்பறையில் நடந்த கொடூர சம்பவம்! - student attack on teacher

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 10:36 PM IST

Updated : Jul 29, 2024, 11:06 PM IST

Student Attack On Teacher: திருச்சி ஸ்ரீ ரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

வெட்டுப்பட்ட ஆசிரியர்
வெட்டுப்பட்ட ஆசிரியர் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கத்தில் அரசு ஆண்கள் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள பயின்று வருகின்றனர். கடைசி நேர பாட வகுப்பை 12 ஆம் வகுப்பு வணிகவியல் ஆசிரியர் சிவகுமார் எடுத்துக் கொண்டிருந்தார்.

காயமடைந்த ஆசிரியர் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்பொழுது திடீரென ஒரு மாணவர் முகக்கவசம் அணிந்து வகுப்பறைக்கு உள்ளே வந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு, அங்கிருந்த ஒரு மாணவரை வெட்டி உள்ளார். இதனை தடுக்கச் சென்ற ஆசிரியர் தலையிலும் மாணவன் வெட்டிவிட்டு தப்பி ஓடிச் சென்றான்.

இதில், காயமடைந்த ஆசிரியர் மற்றும் மாணவரை சக மாணவர்கள் மீட்டு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் வெட்டுப்பட்ட மாணவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், ஏற்கனவே இரு மாணவர்களுக்கும் இடையே மூன்று மாதங்களாக முன்பகை இருப்பதாக தெரிகிறது. மேலும், கடந்த வாரத்தில் இருவருக்கும் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, இன்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் தமிழ்செல்வன் வெட்டுப்பட்ட மாணவர் மற்றும் ஆசிரியரை நேரில் சந்தித்து விசாரித்தார். மேலும், வெட்டிய மாணவனின் தந்தையை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காயமடைந்த ஆசிரியர் கூறுகையில், "நான் கடைசி நேர பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது மாஸ்க் அணிந்த மாணவன் வந்து வகுப்பறையில் இருந்த மாணவர் ஒருவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றான். தடுக்கச் சென்ற என்னையும் வெட்டிவிட்டான். இதற்கு முன்பாக இந்த மாதிரி சம்பவம் நடைபெறவில்லை. ஆசிரியர் தாக்கப்படுவது இதுதான் முதல் முறை. மாணவர்கள் அவர்களுக்குள்ளே வெளியில் அடித்து கொள்வார்கள்” என ஆசிரியர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "மகப்பேறு இறப்பு விகிதம் பூஜ்ஜியம் என்பதே அரசின் இலக்கு" - அமைச்சர் மா.சு உறுதி! - minister Subramanian

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கத்தில் அரசு ஆண்கள் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள பயின்று வருகின்றனர். கடைசி நேர பாட வகுப்பை 12 ஆம் வகுப்பு வணிகவியல் ஆசிரியர் சிவகுமார் எடுத்துக் கொண்டிருந்தார்.

காயமடைந்த ஆசிரியர் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்பொழுது திடீரென ஒரு மாணவர் முகக்கவசம் அணிந்து வகுப்பறைக்கு உள்ளே வந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு, அங்கிருந்த ஒரு மாணவரை வெட்டி உள்ளார். இதனை தடுக்கச் சென்ற ஆசிரியர் தலையிலும் மாணவன் வெட்டிவிட்டு தப்பி ஓடிச் சென்றான்.

இதில், காயமடைந்த ஆசிரியர் மற்றும் மாணவரை சக மாணவர்கள் மீட்டு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் வெட்டுப்பட்ட மாணவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், ஏற்கனவே இரு மாணவர்களுக்கும் இடையே மூன்று மாதங்களாக முன்பகை இருப்பதாக தெரிகிறது. மேலும், கடந்த வாரத்தில் இருவருக்கும் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே, இன்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் தமிழ்செல்வன் வெட்டுப்பட்ட மாணவர் மற்றும் ஆசிரியரை நேரில் சந்தித்து விசாரித்தார். மேலும், வெட்டிய மாணவனின் தந்தையை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காயமடைந்த ஆசிரியர் கூறுகையில், "நான் கடைசி நேர பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது மாஸ்க் அணிந்த மாணவன் வந்து வகுப்பறையில் இருந்த மாணவர் ஒருவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றான். தடுக்கச் சென்ற என்னையும் வெட்டிவிட்டான். இதற்கு முன்பாக இந்த மாதிரி சம்பவம் நடைபெறவில்லை. ஆசிரியர் தாக்கப்படுவது இதுதான் முதல் முறை. மாணவர்கள் அவர்களுக்குள்ளே வெளியில் அடித்து கொள்வார்கள்” என ஆசிரியர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "மகப்பேறு இறப்பு விகிதம் பூஜ்ஜியம் என்பதே அரசின் இலக்கு" - அமைச்சர் மா.சு உறுதி! - minister Subramanian

Last Updated : Jul 29, 2024, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.