ETV Bharat / state

தூத்துக்குடி மீனவர்களுக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம்! - Fishermen Arrest Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 7:57 PM IST

Thoothukudi Fishermen Arrest Case: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 12 பேருக்கு ரூ.1.5 கோடி அபராதமும், 10 பேருக்கு செப்.10-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் மற்றும் கடற்கரை தொடர்பான கோப்புப்படம்
நீதிமன்றம் மற்றும் கடற்கரை தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தைச் சேர்ந்த மகாராஜா மற்றும் தேன் தேனிலா ஆகியோரின் இரண்டு விசைப்படகுகளில் தலா 22 மீனவர்கள் கடந்த ஜூலை 20ஆம் தேதி ஒரு படகிலும், ஜூலை 23ஆம் தேதி ஒரு படகிலும் மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை கடற்படையினர் அவர்களை விசாரணைக்கு என்று அழைத்து, பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த ஆக.5ஆம் தேதியன்று மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.

பின்னர், மீனவர்கள் 22 பேரையும் ஆக.6-ம் தேதி புத்தளம் மாவட்டம், கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் கல்பிட்டி மீன் வளத்துறையினர் நீதிபதி இவோனா விமலரத்ன முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் 22 பேரையும், ஆக.20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து, மீனவர்கள் 22 பேரும் வாரியாபொல சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில், 22 மீனவர்களின் வழக்கு கடந்த ஆக.20-ம் தேதி புத்தளம் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து, மீனவர்கள் அனைவரும் வாரியபொல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று (செப்.3) வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, 12 பேருக்கு ரூ.1.5 கோடி (இலங்கை பணம்) செலுத்துமாறும், செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாத காலம் சிறைத்தண்டனை வழங்கப்படுவதுடன், மேலும் 10 பேரை இம்மாதம் 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அயோனா விமலரத்ன உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: படியில் ஏறும்போது பறிபோன செயின்.. மின்சார ரயிலில் திருடிய ஓசூர் சகோதரிகள் கைது! - chain snatching

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தைச் சேர்ந்த மகாராஜா மற்றும் தேன் தேனிலா ஆகியோரின் இரண்டு விசைப்படகுகளில் தலா 22 மீனவர்கள் கடந்த ஜூலை 20ஆம் தேதி ஒரு படகிலும், ஜூலை 23ஆம் தேதி ஒரு படகிலும் மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை கடற்படையினர் அவர்களை விசாரணைக்கு என்று அழைத்து, பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த ஆக.5ஆம் தேதியன்று மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.

பின்னர், மீனவர்கள் 22 பேரையும் ஆக.6-ம் தேதி புத்தளம் மாவட்டம், கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் கல்பிட்டி மீன் வளத்துறையினர் நீதிபதி இவோனா விமலரத்ன முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் 22 பேரையும், ஆக.20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து, மீனவர்கள் 22 பேரும் வாரியாபொல சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில், 22 மீனவர்களின் வழக்கு கடந்த ஆக.20-ம் தேதி புத்தளம் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து, மீனவர்கள் அனைவரும் வாரியபொல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று (செப்.3) வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, 12 பேருக்கு ரூ.1.5 கோடி (இலங்கை பணம்) செலுத்துமாறும், செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாத காலம் சிறைத்தண்டனை வழங்கப்படுவதுடன், மேலும் 10 பேரை இம்மாதம் 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அயோனா விமலரத்ன உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: படியில் ஏறும்போது பறிபோன செயின்.. மின்சார ரயிலில் திருடிய ஓசூர் சகோதரிகள் கைது! - chain snatching

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.