ETV Bharat / state

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! - special buses to Tiruvannamalai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 4:44 PM IST

Special buses arranged to Tiruvannamalai: பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு செல்லும் மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மற்றும் சிறப்பு பேருந்துகள் புகைப்படம்
திருவண்ணாமலை மற்றும் சிறப்பு பேருந்துகள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பௌர்ணமி தினத்தையொட்டி, நாளை (மே 22) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.

பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இதற்காக பக்தர்கள் பிற மாவட்டங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு சென்று திரும்புவர். இதனால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

நாளை பௌர்ணமியை முன்னிட்டு, பக்தர்களின் கூட்ட நெரிசலைச் சமாளிக்க, சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கவுள்ளதாக போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிவிப்பில், “நாளை சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 330 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 225 பேருந்துகள் இயக்கப்படும்.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி, குளிர்சாதன வசதி கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நாளை திருவண்ணாமலைக்கு இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மழைநீர் தேக்கம்? - தலைமை பொறியாளர் விளக்கம்! - Kalaignar Centenary Library

சென்னை: பௌர்ணமி தினத்தையொட்டி, நாளை (மே 22) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.

பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இதற்காக பக்தர்கள் பிற மாவட்டங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு சென்று திரும்புவர். இதனால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

நாளை பௌர்ணமியை முன்னிட்டு, பக்தர்களின் கூட்ட நெரிசலைச் சமாளிக்க, சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கவுள்ளதாக போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிவிப்பில், “நாளை சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 330 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 225 பேருந்துகள் இயக்கப்படும்.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி, குளிர்சாதன வசதி கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நாளை திருவண்ணாமலைக்கு இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மழைநீர் தேக்கம்? - தலைமை பொறியாளர் விளக்கம்! - Kalaignar Centenary Library

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.