ETV Bharat / state

மீண்டும் தமிழகம் வருகிறாரா.. பிரதமர் மோடி? பொதுக்கூட்ட மைதானத்தை ஆய்வு செய்த நெல்லை மாவட்ட எஸ்பி! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Tirunelveli SP Inspection That Agasthiyarpatti Ground: திருநெல்வேலியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், பிரச்சாரம் நடைபெற இருக்கும் மைதானத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று ஆய்வு செய்தார்.

Tirunelveli SP Inspection That Agasthiyarpatti Ground
மீண்டும் தமிழகம் வருகிறாரா பிரதமர் மோடி..பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் மைதானத்தில் நெல்லை மாவட்ட எஸ்பி ஆய்வு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 9:32 PM IST

திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஏப்.15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதற்காக, அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர் பட்டியில் உள்ள மைதானத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று(ஏப்.10) நேரில் ஆய்வு செய்தார். பிரதமர் வருகைக்காக இந்த மைதானம் தயார் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஹெலிகாப்டர் இறங்கும் தளம் மற்றும் பிரச்சார கூட்டம் நடைபெற இருக்கும் மைதானம் உள்ளிட்ட இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், ஆய்வாளர்கள் மகேஷ் குமார், சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.

முன்னதாக, பிரதமர் மோடி சென்னையில் நேற்று நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்றார். தொடர்ந்து, வேலூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வேலூர் கோட்டை மைதானத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களான, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் புதிய நீதிக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகம், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி ஆகியோரை ஆதரித்துப் பேசினார். மேலும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, அரக்கோணம், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஆதரித்துப் பேசினார்.

இதையும் படிங்க: "அம்மா ஜெயலலிதா; மணல் விற்பனையில் ரூ.4 ஆயிரம் கோடி" - வேலூர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது என்ன? - Lok Sabha Election 2024

திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஏப்.15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதற்காக, அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர் பட்டியில் உள்ள மைதானத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று(ஏப்.10) நேரில் ஆய்வு செய்தார். பிரதமர் வருகைக்காக இந்த மைதானம் தயார் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஹெலிகாப்டர் இறங்கும் தளம் மற்றும் பிரச்சார கூட்டம் நடைபெற இருக்கும் மைதானம் உள்ளிட்ட இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், ஆய்வாளர்கள் மகேஷ் குமார், சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.

முன்னதாக, பிரதமர் மோடி சென்னையில் நேற்று நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்றார். தொடர்ந்து, வேலூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வேலூர் கோட்டை மைதானத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களான, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் புதிய நீதிக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகம், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி ஆகியோரை ஆதரித்துப் பேசினார். மேலும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, அரக்கோணம், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஆதரித்துப் பேசினார்.

இதையும் படிங்க: "அம்மா ஜெயலலிதா; மணல் விற்பனையில் ரூ.4 ஆயிரம் கோடி" - வேலூர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது என்ன? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.