ETV Bharat / state

6 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட வேண்டிய நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணி நேரம் தாமதமாக, மாலை 4 மணிக்கு புறப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை, பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் (bagmati express) ரயில் (12578) நேற்று இரவு 8.30 மணியளவில், கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதன் எதிரொலியாக அந்த தடம் வழியாக செல்லக்கூடிய 18 ரயில்களை ரத்து செய்தும், மேலும் பல ரயில்களை தடம் மாற்றியும் ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இருந்து கிளம்பும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து கிளம்புவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதாவது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அகமதாபாத் செல்லக்கூடிய நவஜீவன் எக்ஸ்பிரஸ் (Navjeevan SF Express) ரயில் காலை 10:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வழக்கமாக புறப்பட்டு, விஜயவாடா வழியாக அகமதாபாத் சென்றடையும். ஆனால், கவரப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக, இரண்டு மணி நேரம் தாமதமாக 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என ரயில்வே தரப்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: பாலாசோர் ரயில் விபத்து போல கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்ததா?

ஆனால், தற்போது நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் மேலும் 4 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், காலை 6 மணி முதலே விஜயவாடா வழியாக அகமதாபாத் செல்லக்கூடிய மக்கள் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருக்கக் கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக, காலை 10.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இன்று மாலை 4 மணி அளவில் 6 மணி நேரம் தாமதமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை, பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் (bagmati express) ரயில் (12578) நேற்று இரவு 8.30 மணியளவில், கவரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதன் எதிரொலியாக அந்த தடம் வழியாக செல்லக்கூடிய 18 ரயில்களை ரத்து செய்தும், மேலும் பல ரயில்களை தடம் மாற்றியும் ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இருந்து கிளம்பும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து கிளம்புவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதாவது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அகமதாபாத் செல்லக்கூடிய நவஜீவன் எக்ஸ்பிரஸ் (Navjeevan SF Express) ரயில் காலை 10:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வழக்கமாக புறப்பட்டு, விஜயவாடா வழியாக அகமதாபாத் சென்றடையும். ஆனால், கவரப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக, இரண்டு மணி நேரம் தாமதமாக 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என ரயில்வே தரப்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: பாலாசோர் ரயில் விபத்து போல கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்ததா?

ஆனால், தற்போது நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் மேலும் 4 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், காலை 6 மணி முதலே விஜயவாடா வழியாக அகமதாபாத் செல்லக்கூடிய மக்கள் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருக்கக் கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக, காலை 10.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் இன்று மாலை 4 மணி அளவில் 6 மணி நேரம் தாமதமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.